ஆன்மிகம்

திருப்புகழ் பாடல் -5

முழு முதற் கடவுள் அய்யன் விநாயகரை வழிபட்டு சென்றால் நினைத்த காரியம் ஏதும் நில்லாமல் இனிதே நிறைவேறும்..அவரின் புகழை பாடுவதற்கு வாழ்நாள் முழுதும் போதாது…

தனதனன தான தனதனன தான
     தனதனன தான …… தனதான

பாடல்

விடமடைசு வேலை அமரர்படை சூலம்
     விசையன்விடு பாண …… மெனவேதான்

விழியுமதி பார விதமுமுடை மாதர்
     வினையின்விளை வேதும் …… அறியாதே

கடியுலவு பாயல் பகலிரவெ னாது
     கலவிதனில் மூழ்கி …… வறிதாய

கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
     கழலிணைகள் சேர …… அருள்வாயே

இடையர்சிறு பாலை திருடிகொடு போக
     இறைவன்மகள் வாய்மை …… அறியாதே

இதயமிக வாடி யுடையபிளை நாத
     கணபதியெ னாம …… முறைகூற

அடையலவர் ஆவி வெருவஅடி கூர
     அசலுமறி யாமல் …… அவரோட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
     அறிவருளும் ஆனை …… முகவோனே.

விளக்கவுரை

விஷம் பொருந்திய
கடலும், தேவர்களின் படையும், சூலாயுதமும், அருச்சுனன் விடுகின்ற
அம்பும் சமானம் என்று கூறும்படியான

கண்களும்,
அதிக பாரமான மார்பகங்களும் கொண்ட விலைமாதர்களின்

சாகசத் தொழில்களினால்
விளையும் துன்பங்கள் ஒன்றையும் அறிந்து கொள்ளாது

வாசனை மிக்க
படுக்கையில், பகல் இரவு என்ற வேறுபாடு இல்லாமல்


சுகபோகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும், அறிவு குறைந்தவனும் ஆகிய
அடியேனும் உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளைச் சேர அருள்
புரிவாயாக…..

அரசன் உக்ரசேனனுடைய
மகள் தேவகி நிகழ இருக்கும் உண்மையை அறிய மாட்டாதவளாக
(அதாவது கண்ணனால் கம்சன் ஏவிவிட்ட அசுரர்கள் கொல்லப்
படுவார்கள் என்ற உண்மை தெரியாது)

மனம் வருத்தம் அடைந்து,உன்னுடைய மகனை ஆண்டருளும் பிள்ளைப்
பெருமாளே, கணபதியே என்னும் நாமங்களை வரிசைப்படக் கூற
(அவள் முறையீட்டுக்கு இரங்கி),
(அன்வயப்படுத்தப்பட்ட வரி) இடையர்களுடைய கொஞ்சம் பாலைத்
திருடிக் கொண்டு போக (அதாவது யாதவர்களின் தூய மனத்தைக்
கண்ணன் தன்வசமாக்க),

பகைவர்கள் உயிருக்கு அஞ்சும்படி நீ அடி எடுத்து வர, (நீ
வரும் ஒலியைக் கேட்டு) அயலார் அறியாமல் அவர்கள் ஓட,

போவது ஏனடா
சொல் எனக் கூறி அவர்கள் தம் முடிகளைத் தாக்கும்

அறிவை
(கண்ணபிரானுக்கு) அருளிய யானைமுகத்துக் கணபதியே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *