ஆன்மிகம்ஆலோசனை

Thirupugazh Song: திருப்புகழ் பாடல் 296 வரிகள் விளக்கம் மொகுமொகு என (திருத்தணிகை)

அருணகிரிநாதர் நமக்கு அருளிய இறைநூலான திருப்புகழ் எம்பெருமான் முருகப்பெருமானின் வீரம்,புகழ் ,காதல் ,வெற்றி என அனைத்தையும் கூறும் நூலாக உள்ளது. கந்தனின் பக்தர்கள் அனுதினமும் கந்தனை நினைக்க போற்றிப் பாட ஏற்ற நூலாக திருப்புகழ் அமைந்துள்ளது.

திருப்புகழ் பாடல் 296

மொகுமொகென நறைகொண்மலர் வற்கத்தி லற்புடைய
     முளரிமயி லனையவர்கள் நெய்த்துக்க றுத்துமழை
          முகிலனைய குழல்சரிய வொக்கக்க னத்துவள …… ரதிபார

முலைபுளக மெழவளைகள் சத்திக்க முத்தமணி
     முறுவலிள நிலவுதர மெத்தத்த வித்தசில
          மொழிபதற விடைதுவள வட்டச்சி லைப்புருவ …… இணைகோட

அகில்மிருக மதசலிலம் விட்டுப்ப ணித்தமல
     ரமளிபட வொளிவிரவு ரத்நப்ர பைக்குழையொ
          டமர்பொருத நெடியவிழி செக்கச்சி வக்கமர …… மதநீதி

அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள
     முருகநரை பெருகவுட லொக்கப்ப ழுத்துவிழு
          மளவிலொரு பரமவொளி யிற்புக்கி ருக்கவெனை …… நினையாதோ

செகுதகெண கெணசெகுத செக்குச்செ குச்செகுத
     கிருதசெய செயகிருத தொக்குத்தொ குத்தொகுத
          டிமிடடிமி டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட …… டிடிதீதோ

திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட
     திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி
          செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட …… ததிதீதோ

தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட
     குகுகுகுகு குகுகுகுகு குக்குக்கு குக்குகுத
          தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி …… யெனவேநீள்

சதிமுழவு பலவுமிரு பக்கத்தி சைப்பமுது
     சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர்
          தணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல …… பெருமாளே

பாடல் விளக்கம்

கம கம என்னும் வாசனை கொண்ட மலர்க் கூட்டத்தில் விருப்பம் கொண்ட, தாமரை
மலரில் வீற்றிருக்கும் லக்ஷ்மி போன்ற மயிலை நிகர்த்த மகளிருடைய நெய்ப்பும், கருமையும் கொண்ட, கருமேகம் போன்ற கூந்தல் சரிந்து விழ, ஒன்று சேர பருத்து வளர்ந்துள்ள, அதிகக் கனம் கொண்ட மார்பகங்கள் புளகம் கொள்ள, வளைகள் ஒலி செய்ய, முத்துக்கள்
போன்ற பற்கள் இள நிலவின் ஒளியை வீச, மிகவும் தவிப்புடன் சில மொழிகள்
அசைவுற்று வெளிப்பட, இடை நெளிவு உற, வட்டவடிவமான வில்லைப் போன்ற புருவங்கள் இரண்டும் வளைவு உற,

அகில், கஸ்தூரி, பன்னீர் விட்டு
அலங்கரிக்கப்பட்ட மலர்ப் படுக்கை கசங்கி கலைவு பட, ஒளி கலந்த ரத்தினங்களால் அமைக்கப்பட்டுப் பிரகாசிக்கும்
குண்டலங்களுடன் போர் புரிவது போல் நீண்டுள்ள கண்கள் நன்றாக சிவக்க , இவ்வாறு கலவி இன்பத்தில் பொருந்துவதால் கொள்கை, அறிவு, நீதி, வலிமை, உருவம், குணம் இவை எல்லாம் மங்கும்படியாக அளவு கடந்து
உள்ளம் தளர்ச்சி அடைந்து உருக,

நரை அதிகமாக, உடல் ஒரு சேர முதிர்ந்து கிழமாய் விழும் அந்தச் சமயத்தில், ஒப்பற்ற பரஞ் சோதியான பேரின்ப வீட்டில் நான்
புகுந்து ஓய்வு பெற்று இருக்க என்னைக் குறித்து உனது திருவுள்ளம் நினையாதோ?இவ்வாறான ஒலி பெருகி நீள தாள ஒத்துடன் முழவு வாத்தியங்கள் பலவும் இரண்டு
பக்கங்களிலும் ஒலிக்கவும், பழைமை வாய்ந்த அன்னை பைரவி துர்க்கையும் உள்ளம் அஞ்சி திகைப்பு அடையவும், சிறப்பு வாய்ந்த திருத்தணிகை மலையில் மயில் மீது நிலைத்து
நடனம் செய்யவல்ல பெருமாளே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *