ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் 136 கலகக் கயல்விழி (பழநி) பாடல்

திருப்பம் தரும் முருகப் பெருமானின் அருள் மழையில் நாம் நனையும் பொழுது நமது வாழ்வானது வளமுடன் சிறந்து இருக்கும். பழநி மலை ஆண்டவர் வாழ்வின் அருள் செல்வம் தரும் முதல்வர், அப்பனுக்கு பாடம் சொல்லிய குரு தெய்வம் அவரது பழநி சிறப்பை அறிவோம்.

கலகக் கயல்விழி போர்செய வேள்படை
     நடுவிற் புடைவரு பாபிகள் கோபிகள்
          கனியக் கனியவு மேமொழி பேசிய …… விலைமாதர்

கலவித் தொழினல மேயினி தாமென
     மனமிப் படிதின மேயுழ லாவகை
          கருணைப் படியெனை யாளவு மேயருள் …… தரவேணும்

இலவுக் கிளையெனும் வாய்வளி நாயகி
     குழையத் தழுவிய மேன்மையி னாலுயர்
          இசைபெற் றருளிய காமுக னாகிய …… வடிவோனே

இதமிக் கருமறை வேதிய ரானவர்
     புகலத் தயவுட னேயருள் மேன்மைகள்
          இசையத் தருமநு கூலவ சீகர …… முதல்வோனே

நிலவைச் சடைமிசை யேபுனை காரணர்
     செவியிற் பிரணவ மோதிய தேசிக
          நிருதர்க் கொருபகை யாளியு மாகிய …… சுடர்வேலா

நிமலக் குருபர ஆறிரு பார்வையும்
     அருளைத் தரஅடி யார்தமை நாடொறும்
          நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு …… முரியோனே

பலவிற் கனிபணை மீறிய மாமர
     முருகிற் கனியுட னேநெடு வாளைகள்
          பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய …… வகையாலே

பழனத் துழவர்க ளேரிட வேவிளை
     கழனிப் புரவுகள் போதவு மீறிய
          பழநிச் சிவகிரி மீதினி லேவளர் …… பெருமாளே.

மேலும் படிக்க : ஸ்ரீ காளிகாம்பாள் 108 போற்றிகள் !!!

திருப்புகழ் பாடும் பழனி ஆண்டவரின் அருள் அனைவ்ருக்கும் கிடைக்க வேண்டும்.

கருணை மனதுடன் வாழ்பவர்கள் நம்முடன் இருப்பது என்றும் சிறப்பு தரும் அவ்வாறே முருகன் இருக்கும இடமும் உயர்ந்தது. இந்த உலக வாழ்வுக்கு உறவு என்னும் உயர்ந்த சொல்லை காக்கும் மனங்கள் தேவை, அன்பு என்னும் சிறந்த பண்பினை கொண்டவர்கள் காண்பிப்பவரே நமது ஒருவரே முருகரே ஆவார்.

அப்பன் நன்மை மிகுந்த நமக்கு தருவதுடன் மறையூர் வேதங்கள் மற்றும் அருள் செல்வங்கள் இணைந்து தருபவர் முதல்வர் முருகரே. மதியை வளர சிவபெருமானின் பிரணவ அர்த்தத்தை கற்றுத் தந்த குருமூர்த்தியின் முருகப்பெருமானே பகைவர்களும் அசுரர்களும் நடுநடுங்க வைத்த வேலபெருமானே, பரிசுத்தமான குருமூர்த்தியை உமது பன்னிரு திருக்கணங்களும் அருள்மொழி பொருள் தரும்போது அவை ஏற்கும் பக்தர்கள் நாங்கள் , பழனியில் பலாப்பழங்கள் சிலைகள் ஆகியவற்றை கிடைப்பதுடன் நல் வளங்கள் பரவிய பகுதியாக அது இருக்கின்றது. செழுமையுடன் இருக்கும் பழனியில் வீற்றிருக்கும் பெருமானும் அருள்மொழி உலகத்தார் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்

திருப்புகழ் 135 கலக வாள்விழி (பழநி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *