அழகு குறிப்புகள்ஆரோக்கியம்மருத்துவம்வாழ்க்கை முறை

இயற்கையின் ரகசியம் என்னவா இருக்கும்..!!

பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி பல் உறுதிப் படும். பப்பாளியை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும். சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும், தேனில் தோய்த்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி ஊறிய பின் வெந்நீரில் கழுவினால் முகச்சுருக்கம் மாறி முகம் அழகு பெறும்.

மாதவிடாய் ஒழுங்குக்கு

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும். வாய்ப்புண் உன் மீது பப்பாளிக்காயை பால் பூசலாம். பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும். பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால் வலி மற்றும் விஷம் இறங்கும். மாதவிடாய் ஒழுங்குக்கு பப்பாளி உண்பது நல்லது.

முகப்பரு, முகச்சுருக்கம்

அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து. வயிற்றுக் கடுப்பு செரிமானமின்மை, அமிலத் தொல்லை, மலச்சிக்கல், இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி மட்டுமே. முகப்பரு உள்ளவர்கள் பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதி துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி முகச் சுருக்கங்களையும் நீக்கி பொலிவு கூட்டும்.

சித்த மருத்துவர்கள் கூறுகையில் விலை குறைந்த பப்பாளியின் மருத்துவ குணங்கள் ஏராளம். என்பதால் பலரும் அதனை ஒதுக்கி விடுகின்றனர். இணையான பழம் எதுவும் கிடையாது என்கின்றனர் மருத்துவர்கள். பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் கல் கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும் நரம்புகள் மற்றும் ஆண்மை தன்மை பலப்படவும். ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும். பப்பாளி சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி பப்பாளிப் பழம் உண்டு வந்தால் நோயும் அண்டாது. தொற்று நோய்கள் தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சக்தி உள்ளது. பப்பாளி எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். விலை மலிவானது. சத்துக்கள் நிறைந்தது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் என்பதால், ஒரு சிலர் மட்டுமே விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், ஸ்ட்ராபெர்ரி

வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பழங்களை தேர்வு செய்வதிலும், நாகரீக முன்னேற்றம் கையாளப் படுகிறது. ஆப்பிள், ஆரஞ்சு, பைனாப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கின்றனர். அதன் இடையே பப்பாளி பழம் இருந்தால் அதனை ஒதுக்கி விடுகின்றனர். விலை குறைந்து பப்பாளி தரும் பயன்கள் ஏராளம், என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

மருத்துவரீதியாக உதவி

பப்பாளிக் காய் குழம்பை பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வந்தால் பால் சுரப்பு கூடும். பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால் குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும். கல்லீரல் கோளாறுகளுக்கும், பப்பாளி மருத்துவரீதியாக உதவி புரிகிறது. வளர்ந்து வரும் நாகரீகம், அறிவியல் முன்னேற்றம், போன்ற காரணத்தினால் உணவு பழக்கவழக்கம் மாறிவரும். இன்றைய தலைமுறையினர் பீட்சா, பர்கர், நூடுல்ஸ், உள்ளிட்ட உணவு பொருட்களை, விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *