சினிமா

தீர்க்கதரிசி சூர்யாவின் தடாலடியான முடிவு

திரையுலகில் பல முன்னணி கதாநாயகர்கள் போட்டியிட்டுக் கொண்டு இருக்கையில் தீர்கதரிசி சூர்யா தனித்துவமாக தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு பயணம் செய்கிறார்.

திரையில் கதாநாயகனாக சமூகத்தில் சமூக சேவகனாக வீட்டில் கணவனாக தந்தையாக சமையலரையிலும் கலக்குகிறார் சூர்யா. சூர்யா நடித்த பல படங்கள் ஹிட் லிஸ்டில் தழுவுகிறது இன்னும் சொல்லப்போனால் அனைத்துமே ஹிட் லிஸ்டில் உள்ளது. சீகுவல் படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பும் முன்னணி நடிகர் சூர்யா.

சூரரை போற்று போஸ்டர்கள் ரசிகர்களை ஈர்க்க ஊரடங்கு எப்பொழுது முடிவது எப்போது திரையரங்கங்கள் திறப்பது நாம் எப்பொழுது பார்ப்பது என ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் ஹரி நடிகர் சூர்யா இவர்களின் காம்பினேஷன் தரும் பரபரப்பான படம் பெரிய ரசிகர் பட்டாளத்தையே கொண்டது. இவர்கள் இணையும் அடுத்த படம் அருவா.

கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் சின்னத்திரைக்கு தற்போது 60 ஆட்கள் கொண்ட குழு செயல்படலாம் என அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. வெள்ளித்திரைக்கு 60 ஆட்களைக் கொண்டு வேலை செய்வது என்பது மிகவும் கடினம்.

வெள்ளித்திரையில் இருக்கும் அனைவரும் எப்பொழுது நமக்கு வேலை தொடங்கும் என காத்திருக்கும் நிலையில் சூர்யா தடாலடியாக ஒரு முடிவை எடுத்துள்ளார். பல படங்களை பட்டியலில் லைன் கட்டி வைத்துக் கொண்டிருக்கும் இவர் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஜனவரி மாதம் வரை தள்ளி வைத்துள்ளார்.

கொரோனாவால் ஆங்காங்கே மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையை அனைவரும் அறிந்த வண்ணம் இருக்கையில் சூர்யாவும் இதனை மனதில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளார்.

தீர்க்கதரிசியாக தற்போது திகழும் சூர்யா மறைமுகமாக கொரோனாவிற்கு கெடு வைத்துள்ளாரா? என்று ரசிகர்களின் மனதில் சின்னதாக பெரிய நப்பாசை எழுகிறது.

மக்களே பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *