சினிமாசெய்திகள்தமிழகம்

நடிகருக்கு கோவில் கட்டிய தெலங்கானா கிராம மக்கள்

தெலங்கானா கிராம மக்கள் கடவுளாக கோயில் கட்டி நடிகர் சோனு சூட்டை கொண்டாடி வருகின்றனர். சோனு சூட் உயர்ந்த உள்ளம் மக்களை கவர்ந்து விட்ட காரணத்தினால் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். தங்களது கடவுளாக உள்ளூரைச் சேர்ந்தவர்கள் ஒருமித்த குரலில் உரக்கச் சொல்கின்றார்கள்.

  • நெட்டிசன்கள் பாராட்டி சமூக வலைதளங்களில் கொண்டாடி வந்தனர்.
  • தெலங்கானா கிராம மக்கள் கடவுளாக கோயில் கட்டி நடிகர் சோனு சூட்டை கொண்டாடி வருகின்றனர்.
  • சமூகப் பணியை நினைவு கூறும் வகையில் சோனுவிற்கு கோயில் எழுப்பி உள்ளனர்.

கொரோனா காலகட்டத்தில் தேவைப்படுபவர்களுக்கு வாரிக் கொடுத்த கர்ணன். மனிதனை மனிதனாக பார்த்த உயர்ந்த எண்ணம். முதல் ஆளாக சென்று உதவியவர்.

தெலுங்கானா சித்தி பேட் மாவட்டத்தில் டப்பா கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சமூகப் பணியை நினைவு கூறும் வகையில் சோனுவிற்கு கோயில் எழுப்பி உள்ளனர். அங்கு சோனுவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : கோவிந்தா கோவிந்தா…எங்கேயும் எப்போதும் படம் பாடல்.

சோனுவின் சிலையை செதுக்கிய சிற்பியை வைத்து கோயிலைத் திறந்தனர் உள்ளூர் மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் தொடங்கி மாணவர்கள், விவசாயிகள், பசியால் வாடியவர்கள் என்று உதவிக் கொண்டிருந்த சோனுவிற்கு பணியை நெட்டிசன்கள் பாராட்டி சமூக வலைதளங்களில் கொண்டாடி வந்தனர்.

மேலும் படிக்க : வீராப்பு படம் பாடல் வரிகள் புலியைக் கிளி ஜெயிச்சா காதல்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *