குழந்தைகள் நலன்வாழ்க்கை முறை

உங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கற்றுக் கொடுங்கள்

உங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே கற்றுக் கொடுங்கள். குழந்தை ஒருவரைப் பற்றி ஒருமுறை குற்றச்சாட்டை கூறினாலே அதை கவனிக்கத் தொடங்குங்கள். கேட்டு விட்டு அமைதியாக இருக்க வேண்டாம். நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்ய வேண்டும்.

நாம் பெற்றோராக இருந்தாலும் சரி இவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது உங்கள் குழந்தையின் தனித்துவத்தை அல்லது தனித்திறமையை புரிந்து கொள்ளுங்கள். குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக் கூடியவற்றை தவிர்க்க வேண்டும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப் பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால் அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்து தான் தொடங்குகிறது.

தொலைக்காட்சி, சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம் செயலிழக்கச் செய்து விட்டோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்க அறிவுறுத்துவது நல்லது.

குழந்தைகள் தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக நாம் அறிந்து கொண்டு, அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக் கொடுத்து விட வேண்டும். வளரும் பருவத்திலேயே தாம்பத்தியம் மற்றும் அதன் மதிப்பீடுகளை பக்குவமாக கற்பிக்க வேண்டும். இல்லை என்றால் சமுதாயம் அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக் கற்றுக் கொடுத்து விடும்.

சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய ஒரு குழந்தை திடீரென்று கலை இழந்து விடும் போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக் கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும். உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒரு போதும் சந்திக்க அனுமதிக்க கூடாது. அல்லது அவரிடம் அழைத்துச் செல்ல வேண்டாம்.

குழந்தை விளையாடப் போகும்.போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ மனைவி என்று குறிப்பிடுவது மனதில் பதிய வைப்பது தவறான செயல்.

2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்வதை தவிர்த்தல் அவசியம். பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு பெற்றோர்களும் இதை கவனித்து சிறுவயது முதலே குழந்தைகளுக்கு கற்பிப்பது அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *