செய்திகள்தமிழகம்

மதுப்பிரியர்களே உஷார்…டாஸ்மாக் கடைகள் இயங்காது…!

3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அதற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் பறக்கும் படைகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈர்ய்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை வாக்குச்சாவடிக்கு 5 கிமீ சுற்றளவிலுள்ள டாஸ்மாக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணும் நாளான வரும் 22ம் தேதியும் 5 கிமீ சுற்றளவிலுள்ள டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் மன வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *