செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் தளர்வுடன் அனுமதி முழு விவரம்

புதிய தளர்வுகளில் எதற்கெல்லாம் அனுமதி என்ற முழு விவரம் அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களை தவிர பிற பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய ஊக்குவிக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து அனுமதி கொடுக்கப்பட்ட தடங்களில் மற்றும் அனுமதி உள்ளன மாநிலத்தில் பயணிகள் ரயில் செயல்பட செப்டம்பர் 15 வரை அனுமதி இல்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முழு முடக்கம் ரத்து திரைப்பட படப்பிடிப்புக்கு ஒரே சமயத்தில் எழுபத்தைந்து நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களுக்கு சுற்றுலா தலங்கள் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் பெற்று செல்ல அனுமதி. வங்கிகள் மற்றும் அதை சார்ந்த நிறுவனங்கள் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி உண்டு. அரசு அலுவலகங்கள் செப்டம்பர் 1 முதல் நூறு சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டன. பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் திறக்க அனுமதி. ஹோட்டல்கள், விடுதிகள், கேளிக்கை விடுதிகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதி உண்டு.

டீ கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பார்சல் 9 மணி வரையிலும் இயங்க அனுமதி வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் 8 மணி வரை இயங்கலாம். வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள், நூறு சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம்.

வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் இயங்க அனுமதி இல்லை. சென்னையில் மெட்ரோ ரயில் செப்டம்பர் ஏழாம் தேதி முதல் செயல்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள பொது மற்றும் தனியார் போக்குவரத்து செப்டம்பர் 1 முதல் செயல்படும்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டது. தமிழக முழுவதும் முழுவதும் இ-பாஸ் முறையை ரத்து. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் முறை தொடர்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *