டிஎன்பிஎஸ்சி

தமிழ் இலக்கணம் ஹைலைட்ஸ் பகுதி 7!

போலி :ஒரு சொல்லில் முதலில் உள்ள எழுத்தோ, இடையில் உள்ள எழுத்தோ கடையில் உள்ள எழுத்தோ மாறுபட்டாலும் பொருள் மாறுபடாமல் இருந்தால் போலி எனப்படும். 
முதலெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது முதற்போலி எனப்படும். எ.கா: மஞ்சு, மைஞ்சு, மயல், மையல்.


இடையெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது இடைப்போலி எனப்படும்
எ.கா: முரசு- முரைசு, அரசியல் – அரைசியல், அரசு- அரைசு
ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது கடைப்போலி எனப்படும். 
எ.கா: அறம் – அறன், பந்தல்- பந்தர், அகம்- அகன், கலம்- கலன் 
சொல்லில் உள்ள அனைத்து எழுத்துக்களும் மாறுபட்டாலும் பொருள் மாறுபடாமல் வருவது முற்றுப்போலி எனப்படும்.
எ.கா: ஐந்து- அஞ்சு

வழக்கு:நம் முன்னோர்கள் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் வழங்கிவந்தோர்களோ அதை வழங்கி வருவது ஆகும். 
வழக்கு 2 வகைஇயல்பு வழக்கு : 3 வகை1 இலக்கணமுடையது2 இலக்கணப் போலி3 மருஉ
தகுதி வழக்கு 3. வகை1 இடக்கரடக்கல்2மங்கலம்3.குழுஉக்குறி

இயல்பு வழக்கு: 1. இலக்கணமுடையது:- இலக்கணப் பிழை இல்லாமல் சொற்களை வழங்கி வருவதுஎ.கா: யாழினி பாடம் படித்தாள்               மாடு வந்தது
 2. இலக்கணப்போலி : நம்முன்னோர்கள் இலக்கணமுடையது போல் வழங்கி வரும் சொற்கள் எ.கா: புறநகர், வாயக்கால், நுனிக்கொம்பு
இலக்கணமுடையதுநகர்ப்புறம்கால்வாய்நுனிக்கொம்பு
இலக்கணப்போலிபுறநகர்வாயக்கால் கொம்புநுனி

3. மரூஉ: மருகி வருதல் அல்லது சிதைந்து வருதலை மரூ என்பர் எ.காதஞ்சாவூர் என்பதை தஞ்சைகோயம்ப்புத்தூர் என்பதை கோவைதிருச்சிராப்பள்ளி என்பதை திருச்சி

தகுதிவழக்கு:இடக்கரடக்ககல்= பலர் முன்னே கூற இடையூராக இருக்கும் சொற்களை 
நிக்கித் தகுந்த சொற்களால் வழங்குவது.
எ.கா: வாய்கழுவி வந்தேன் என்பதை வாய்ப்பூசி வந்தேன் எனக் கூறுவது
மங்கலம்:அம்ங்கலமான சொற்களை நீக்கி மங்கலமான சொல்லால் வழங்குவது 
எ.கா: பொற்கொல்லன் பொன்னைப்பற்றி எனக் கூறுவது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த  ஒன்றாகும்.

தொகைநிலைத் தொடர்கள்: 

தொகை 6 வகைப்படும்:சொற்கள் தொடராகும் போது, இரு சொற்களுக்கு  இடையே வேற்றுமை,  வினை உவமை முதலியவற்றுள் ஒன்று மறைந்து வரும், இவ்வறு உருபுகள் மறைந்து வரும்  தொடர்களை தொகைநிலைத் தொடர்கள் என்பர். 

வேற்றுமைத்தொகை: 

இரு சொற்களுக்கு  இடையில் வேற்றுமை உருபு மறைந்து வருவாயின் 
அது  வேற்றுமைத் தொகையாகும். வேற்றுமை எட்டு வகைப்படும் என்பதை முன்பே  பார்த்தோம். முதல் மற்றும் எட்டாம் வேற்றுமை  உருபு இல்லை.
எ.கா:பால்  பருகினான் => ‘பாலைப்  பருகினான்’ ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை  உருபுமறைந்து  வந்துள்ளதால், இரண்டாம் வேற்றுமைத் தொகை.

2. தலை வணங்கினான்=> மூன்றாம் வேற்றுமைத் தொகை (‘ஆல்’  மறைந்து வந்துள்ளது)
3. வேலன் மகள்=> நான்காம்  வேற்றுமைத் தொகை  (கு என்னும்  4-ஆம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)
4. ஊர்நீங்கினான் 5-ம் வேற்றுமை தொகை  (ஊர்+இன்+நீங்கினான் – 5-ம் வேற்றுமை உருபு ‘இன்’ மறைந்து வந்துள்ளது)
5. செங்குட்டுவன் சட்டை=> 6-ம் வேற்றுமைத் தொகை (அது என்னும் 6-ம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)
6. குகைப்புலி=> வேற்றுமைத் தொகை (குகை+கண்+புலி)   ( கண் எனும் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது)

வினைத்தொகை: மூன்று காலத்தையும்  காட்டும்  இடைநிலைகளும் பெயரெச்ச விகுதயும் மறைந்து வரும் பெயரெச்சம் வினைத்தொகை  ஆகும். 
காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகைஉண்கலம் உண்டகலம் – இறந்த காலம் உண்ணுகின்ற கலம்- நிகழ்காலம்உண்ணும் கலம்- எதிர்காலம் இதேபோல், ஊறுகாய், செய்தொழில், ஆடுக்கொடி, பாயும்புலி, அடைகக்கடல், 
வருவண்டி போன்றவையும் வினைத்தொகைகளே ஆகும். 

பண்புத்தொகை: சொற்களில் ‘ஆன்’ என்னும் பண்புருவும் ‘மை’ விகுதியும் தொக்கி  மறைந்து வருவது. 
வெண்ணிலவு – வெண்மை ஆன நிலவுசதுரக்கல்- சதுரமான கல் இன்சுவை- இனிமையான சுவை
நிறம், மணம், குணம், வடிவம், ஆகியவற்றைச் சார்ந்த பண்பு பெறப்படும்
 குறிப்பு = ஒரு சிறப்பு பெயருக்கும், பொதுப் பருக்கும் இடையில் ஆகிய என்னும் பண்புரு மறைந்து வந்தால் அது இருபெயரிட்டுப் பண்புத்தொகை ஆகும். 
எ.கா: மல்லிகைப் பூமல்லிகை – சிறப்பு பெயர்பூ – பொதுப் பெயர் 

உம்மைத்  தொகை: சொல்லின் இடையிலும், இறுதியிலும் ‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து வந்து பொருள் தந்தால் அது உம்மைத் தொகை ஆகும். 
கபிலபரணர்- கபிலரும் பரணரும்தாய்தந்தை – தாயும் தந்தையும்உற்றார் உறவினர் – உற்றாரும்  உறவினரும் 

உவமைத்  தொகை: சொற்களுக்கு இடையில் போல என்ற உவமை, உருபுகள் மறைந்து வருவது எ.கா: கயல்விழி- கயல் போன்ற விழி

அன்மொழித் தொகை: வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலை தொரபுகளுக்கு புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள்  தருவது  அன்மொழித்தொகை  ஆகும். 
எ.கா: தொகாநிலைத் தொடர்:தொகா நிலைத்  தொடர் 9 வகைப்படும்
ஒரு தொடரில் இரு சொற்களுக்கு  இடையில் சொல்லோ, உருபோ மறையாது வெளிப்படையாகப் பொருளை உணர்த்துவது தொகாநிலைத் தொடர் ஆகும். 
 தொகை=> மறைந்து வருதல் ஆகும்தொகா=> மறையாது வெளிப்படையாக வருதல் 

1. எழுவாய்த் தொடர் -கபிலன்  வந்தான் 2. விளித்தொடர்- கதிராவா! வாவினைமுற்றுத் தொடர்- கண்டேன் சீதையை பெயரெச்ச தொடர் – விழுந்த மரம்வினையெச்ச தொடர்- வந்து  போனான்வேற்றுமை தொகைநிலைத் தொடர்- வீட்டைக் கட்டினான்இடைச்சொல் தொடர் – மற்றொன்று உரிற்சொற்றொடர்- மாமுனிவர்அடுக்குத் தொடர்- வாழ்க வாழ்க வாழ்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *