டிஎன்பிஎஸ்சி

தமிழ் இலக்கண ஹைலைட்ஸ் பகுதி 6!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல மொழிப்பாடம் என்பது தேர்வின் வெற்றியை நிர்வகிக்கும் முக்கிய காரணமாகும். அதனை உணர்ந்து  தேர்வர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். பரிட்சையினை வெல்ல புத்திசாலித்தனமான செயல்பாடு அவசியம் ஆகும்.
தொழில் நிகழ்வதை காட்டுவது- உடன்பாடுதொழில் நிகழாமையைக் காட்டுவது- எதிர்மறை

எச்சம்:
முற்றுபெறாத முழுமையடையாத பெயரை கொண்டு முடிவது ஒரு  வினைப் பெயரை கொண்டு முடிவது ஆகும். ஆள், ஆன் விகுதி குறைந்து நிற்கும் சொல்லே எச்சம் ஆகும்.

பெயரெச்சம்:


முற்றுப்பெறாத எச்சவினை பெயரைக் கொண்டு முடிவது ஓர் எச்சவினைபெயரைக் கொண்டு முடிவதாகும். இது மூன்று   வகைப்படும்.

எ.கா:
 நிகழ்கால்  பெயரெச்சம்: படிக்கின்ற கயல்விழி, செல்கின்ற கோதை
இறந்தகால பெயரெச்சம்= படித்த கயல்விழி, சென்ற கோதை
எதிர்கால பெயரெச்சம்= படிக்கும் கயல்விழி, சொல்லும் கோதை

மேலும் பெயரெச்சம், தெரிநிலை பெயரெச்சம், குறிப்பு பெயரெச்சம் என இருவகைப்படும்.

தெரிநிலை பெயரெச்சம்:


முக்காலத்தையும் செயலையும் வெளிப்படையாக காட்டி, செய்பவன் மு முதலான ஆறும்எஞ்சி நிற்குமாறு அமைவது

எ.கா. உண்ட இளங்கோவன்

செய்பவன்= இளங்கோவன்
கருவி= கலம்
நிலம்= வீடு
செயல் உண்ணுதல்
காலம்= இறந்தகாலம்
செய்பொருள் = சோறு

வந்தபையனைப் பார்த்து கண்ணன் நின்றான்= தெரிநிலை பெயரெச்சம்

குறிப்பு பெயரெச்சம்:

வந்த பையனைப் பார்த்துக் கண்ணன் நின்றான்=  தெரிநிலை பெயரெச்சம் எனப்படும்.

குறிப்பு பெயரெச்சம்:
காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்சொல்லை கொண்டு முடியும் எச்சமாகும்.

எ.கா: நல்ல பையன்
நேற்று நல்ல பையன்} 
இன்று நல்ல பையன் } காலத்தை குறிப்பால் உணர்த்தி வருவது

வினையெச்சம்:
முற்றுப் பெறாத எச்ச வினை வினையைக் கொண்டு முடிவது காலவ்கையால் வினையெச்சம் மூவகைப்படும்.
இறந்தகால வினையெச்சம்- படித்து வந்தான், ஓடிச்சென்றான்

நிகழ்கால வினையெச்சம்:
படித்து வருகின்றான், ஓடிச் சென்றான்
எதிர்கால வினையெச்சம் – படித்து வருவான் ஓடிச் செல்வான்
பெயரெச்சத்தில் எச்சங்கள் மட்டுமே செய்த செய்கின்ற, செய்யும் என காலத்திற்கு ஏற்ப மாறும் வினையெச்சத்தில் வரும்  எச்சங்கள்   மாறாது.

தெரிநிலை வினையெச்சம்:
காலத்தையும், செயலையும், உணர்த்தி வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சவினை , தெரிநிலை வினையெச்சம் எனப்படும் .

குறிப்பு வினையெச்சம்:
காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்ச வினை குறிப்பு வினையெச்சம் ஆகும்.

எ.கா: மெல்ல பேசினான்
கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்

முற்றெச்சம்:
ஒரு வினைமுற்றுச் சொல், எச்சப் பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடியும்.
எ.கா: மைதிலி வந்னள், பாடினள்
முருகன் படிதனன், தேறினன்

காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை உணர்த்தி நின்று வினைமுற்றியக் கொண்டு முடியும் எச்ச வினை குறிப்பு வினையெச்சம் ஆகும்.

இடுகுறிபெயரெச்சம் காரண்ப் பெயரும்:
எந்த காரணமும், இல்லாமல் நம் முன்னோர்கள் ஒரு பொருளுக்கு குறியீடாக இட்டப் பெயரே இடுகுறிப் பெயராகும்.

ஏதேனும் ஒரு காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் காரணப் பெயராகும்.
இடுகுறிப் பெயர்,  இடுகுறு சிறப்பு பெயர் 
மரம்                                  மாமரம்
காடு                                     தென்னை
                                               வேப்பங்காடு
மலை                                   பனங்காடு
                                                மருதமலை
                                                பழனிமலை

காரண்ப்பெயர்

காரணப் பொதுப்பெயர்
பறவை

காரணப் பெயர்:
சிறப்புப்பெயர்
எ.கா:
காகம்
குயில்
புறா
கிளி
வலையல்

மரம், காடு, மலை போன்றவை இடுகுறிபெயராயினும் பொதுவாக வருவாதால் இடுகுறிப் பொதுப்பெயர்.

மா, பலா, வாழை, பழனிமலை, மருதமலை போன்றவை சிற்ப்பாய், இடுகுறிவாய் வருவதால் இடுகுறி சிறப்பு பெயர் ஆகும்.

பறவை என்பது அனைத்து  பறவைகளும் பொதுவாய், காரணத்தோடு வருவதால் காரணப் பொதுப்பெயர்  ஆகும்.

வளையல் என்பது வட்டமாக இருப்பதைக் குறித்தாலும் கையில் அணிவதை மட்டுமே சிறப்பாய் குறிப்பதால் காரணச் சிறப்பு  பெயர் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *