சினிமா

ரஜினியின் 100வது நாள் ஜெயிலர் படப்பிடிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் நூறாவது நாள் ஷூட்டிங்கை கடந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது படம் ஜெயிலர் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற ஜெயில் வார்டன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் பெயரில் வார்டனாக நடிக்கின்றார்.

ஜெயிலர் ஸ்டார்கள்

ஜெயிலர் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகின்றார். அனிருத் ரவிச்சந்திரன் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார். இப்படத்தில் மலையாள மார்க்கெட் ஹீரோ மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி சரூஃப் போன்றோரும் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடக்கின்றனர்.

ஜெயிலர் 100 நாள் படப்பிடிப்பு

ஜெயிலர் படப்பிடிப்பு நூறாவது நாள் முடிந்ததை இப்படத்தின் தயாரிப்பாளர் அக்சய் தியாகராஜன் முழு மூச்சாய் இறங்கியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் ஷூட்டிங் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும். விரைவில் ஜெயிலர் படம் குறித்த அப்டேட்டுகள் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஜெயிலர் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க : மக்களை ஆச்சரியப்படுத்தும் வித்யுலேகா ராமன்

சென்னையில் ஜெயிலர் படக்குழு

ஏப்ரல் மாதத்தில் ஜெயிலர் படம் முழுமையாக முடிக்கப்படும் என்றும் தகவல்கள் கிடைத்து வருகின்றன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஜெயிலர் படப்பிடிப்பானது நடந்து வந்தது. தற்போது இப்பபடக் குழுவானது சென்னையில் ஷூட்டிங் நடத்தி வருகின்றனர். வரும் நாட்களில் ஜெயிலர் பட போஸ்டர்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்றும் நம்பப்படுகின்றது. நெல்சன் திலீப் குமார் காமெடியுடன் கதையை நகர்த்துவார் ரஜினிக்கு இது இருக்கும் என்றும் நம்பப்படுகின்றது

மேலும் படிக்க : ரசிகர்களுக்கு நன்றி கூறும் ஹிப் ஹாப் தமிழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *