ஆரோக்கியம்மருத்துவம்யூடியூபெர்ஸ்

Benifits of lettuce: எந்த நோய்க்கு எந்த கீரை சாப்பிட்டால் உடனே குணமாகும்????

நம் முன்னோர்கள் உணவே மருந்து என்ற வாக்கியத்திற்கு ஏற்ப உணவையே மருந்தாக்கி சாப்பிட்டு வந்ததால் தான் அவர்கள் அனைவரும் அவ்வளவு உடல் வலிமையுடனும் மன தைரியத்துடனும் காணப்பட்டனர். உடல் வலுப்பெற நாம் புரதச்சத்து நிறைந்த உணவுகள் ,காய்கறிகள் ,கீரைகள் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொண்டால் நல்லது. அனைவரும் ஏதோ ஒரு கீரையை வாங்கி சாப்பிட்டு வருவோம் ஆனால் அதில் உள்ள பலன்களைப் பற்றி நாம் அறிவதை கீழே என்றால் நல்லது அது மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் அந்த கீரைகள் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது ஒரு நோய்க்கு இந்த கீரையை சாப்பிட்டால் குணமாகும் என்ற அளவிற்கு மகத்தான மருத்துவம் நிறைந்து உள்ளது . அதனை தெரிந்து கொண்டால் சரியான கீரையை சாப்பிட்டு நோயை விரைவில் குணமாக்கலாம்.

எந்த கீரை சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும்

முளைக் கீரை : மலச்சிக்கல் , வயிற்று வலி உள்ளவர்களுக்கு எளிதில் குணமாகும்.

அரைக் கீரை : தோல் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மகத்தான மருந்தாக இருக்கும். தோல் சுருக்கம் அடைதல் , தோல் அரிப்பு, தோல் எரிச்சல் போன்ற அனைத்து தோல் சம்பந்தமான நோய்களுக்கும் தீர்வாகும்.

சிறு கீரை : சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல் சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளிப்படுதல் சிறுநீரகக் கல் மேலும் சிறுநீரில் உள்ள அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.

அகத்திக் கீரை : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பசி இன்மை என்பது பொதுவான ஒரு விஷயமாகிவிட்டது. குடல் பெருக்கம் ,சீக்கிரம் பசி எடுத்தல் ,நன்றாக உணவுகளை சாப்பிட உதவும்.

பருப்புக் கீரை : உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும். ரத்த அழுத்தம் சீரான முறையில் இருக்க உதவும்.

முருங்கைக் கீரை : இரும்புச்சத்து கால்சியம் அதிகம் உள்ள கீரை என்பதால் எலும்பு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கும். எலும்பு தேய்மானம் எலும்பு வலுவின்மை எலும்பு வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.

தூதுவளைக் கீரை : ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இது ஒரு அறிய மருந்தாக அமையும் மேலும் பசியின்மையை குறைத்து பசி எடுக்க உதவும்.

முடக்கத்தான் கீரை : மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாக அமையும். மேலும் இந்த கீரையை எண்ணெயில் சேர்த்து தேய்த்துவர இளநரை இல்லாமல் கருமையான அடர்த்தியான முடி வளர உதவும்.

வெந்தயக் கீரை : நீரழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக இருக்கும் மேலும் உடல் சூடு, வயிற்றுப்புண் சரியாக உதவும்.

மணத்தக்காளி கீரை : குடல் புண்ணை சரியாக உதவும் வாய் துர்நாற்றம் வாய்ப்புண் ஆகியவற்றையும் குணமாக்கும்.

பொன்னாங்கண்ணிக் கீரை : கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் அறிவு மருந்தாக இருக்கும் மேலும் எண்ணெயில் சேர்த்து தேய்த்து வர அடர்த்தியான முடி வளரும்.

வல்லாரைக் கீரை : ஞாபக சக்தியை அதிகரித்து புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும்.

பசலைக் கீரை : ரத்த சோகை உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வர விரைவில் ரத்தசோகை நீங்கி பழைய நிலைக்கு திரும்ப உதவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *