செய்திகள்தமிழகம்

பொங்கல் பரிசுடன் இணையும் கரும்பு

தமிழகத்தின் வரும் 30 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் கரும்பு வழங்குவது குறித்தும் தமிழக அரசு ஆலோசனையில் இருந்தது.

கரும்பு கொடுக்க போராட்டம்;

பாஜக மற்றும் மத்த கட்சிகள் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட போராட்டங்கள் கோரிக்கைகள் அறிவிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொண்டு. இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி பொங்கல் பரிசு தொகப்புடன் கரும்பு ரேஷன் கடை அட்டைதாரர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.

கரும்பு

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரை 1000 ரொக்கம் தொகையும் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஒவ்வொரு ரேஷன் கார்டு அட்டைதாரருக்கும் முழு கரும்பு ஒன்று வழங்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை 1000 ரொக்கம் ஒரு முழு கரும்பு இவை பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி ஒன்பதாம் தேதி ஸ்டாலின் துவங்கி வைப்பார் என்றும் அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *