கல்விசெய்திகள்தமிழகம்

ஆன்லைன் வகுப்பினால் ஏற்படும் உளவியல் சிக்கல்கள்

அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடந்து வருகிறது. பள்ளிகள் திறப்பது பற்றி முடிவெடுக்கவில்லை என்று அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி தேர்வு நடத்தும் அளவுக்கு நாட்கள் மாதங்கள் ஆகிவிட்டன. உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பள்ளிகள் திறக்கும் என்பது போன்ற செய்திகள் வந்தாலும் மற்ற வகுப்புகளுக்கு எப்போது என்று தெரியவில்லை.

கொரோனாவும் ஊரடங்கு முடிவுக்கு வருவது போல் இல்லை. எதுவும் உறுதியற்ற நிலையில் எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தலாம் என்ற கேள்வி பலரின் மனதிலும் எழுகிறது. ஸ்மார்ட் போன்களில் பலரிடம், சிலரிடம் மடிக்கணினி இல்லை. இரண்டும் இருந்தாலும் டேட்டா தேவைப்படுகிறது.

அப்படி டேட்டா இருந்தாலும் தற்போதைய சூழ்நிலைக்கு அந்த டேட்டாவும் போதுவதில்லை. அதிகப்படியாக கூடுதல் டேட்டா தேவைப்படுகிறது. வாயை கட்டி வயிற்றை கட்டி எதை வாங்குவது? எப்படி வாங்குவது? என்ன செய்வது என்று தெரியாமல் உளவியல் சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள் இருந்தாலும் எத்தனை பேருக்கு இது ஒத்து வருகிறது என்று ஆராயவேண்டியுள்ளது. நாமும் நம் குழந்தைகளும் ஸ்மார்ட்போனை இதுவரை பொழுதுபோக்குக்காக பயன்படுத்தி பழகிவிட்டோம். இயற்கையாகவே குழந்தைகள் எழுதியிருக்கிறார்கள். சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது தான் மனித இயல்பு.

வகுப்பு நேரத்தில் என்னதான் கட்டுப்பாடாக இருந்தாலும், கவனம் சிதறி அந்த போனிலோ, கணினியிலோ வேறு இணைய தளத்துக்கு போய் நேரத்தை கழிக்கலாம். எல்லாம் தெரிந்த பெரியவர்களான நாம் எதிர்கொள்கிறோம். கணினியில் வேலை செய்யும் போது எத்தனை கவனச்சிதறல் நமக்கு. நாம் குழந்தைகளை குறை சொல்லப் போய் என்ன செய்ய என்பதையும் உணர வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *