டிஎன்பிஎஸ்சி

கற்கால மனிதன் வாழ்க்கை முறை குறிப்புகளின் வினா- விடை!

டிஎன்பிஎஸசி  தேர்வுக்கான பாட வாரியான  குறிப்புகளுடன் கேள்வி பதில்கள் கொடுத்துள்ளோம். படிக்கவும் தேர்வை வெல்லவும்.

1. வரலாற்றுக்கு முந்தய  காலம் என்பது  எது ?

விடை:எழுத்து ஆதரங்கள் கிடைக்காத காலம் ஆகும்.


2. ஆதிமனிதன் முதன் முதலில் பழக்கிய விலங்கு

விடை:நாய்


3. பழைய கற்கால மக்கள்

விடை: இலை, மரப்பட்டை, விலங்குகளின் தோல் ஆகியவற்றை ஆடையாக அணிந்தனர்.


4. ஆதிச்சநல்லூர் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உள்ளது.

விடை: திருநெல்வேலி


5. புதிய கற்காலம் எனப்படுவது

விடை: கி.மு.10000 முதல் 5000 ஆகும்.


6.  பழைகற்கால மனிதர்கள் பயன்படுத்திய  ஆயுதங்கள் எவ்வாறு இருக்கும்?

விடை: கடினமானதாக சொரசொரப்பான கற்களால் ஆனது ஆகும்.


7. எந்த காலத்தில் ஆதிமனிதன் பயன்படுத்திய கற்கள் மாறியது

விடை: இடைக்கற்காலத்தில்


8.  புதிய கற்காலத்தின்   கண்டுப்பிடிக்கப்பட்டது எது?

விடை:தீ, சக்கரம்


9. புதிய கற்காலத்தின் முக்கிய தொழில் யாது?

விடை: கற்களாலான உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.


10.  இடைக்கற்காலத்தின் இறுதியில்  உருவான தொழில் எது?

 விடை: விவசாயம் 


11. பாலியோ லித்திக் காலத்தில் மக்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தனர்

விடை: வேட்டையாடி வாழ்ந்தனர்.


12. கற்களாலான பாறை ஒவியங்கள் எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது?

விடை: மத்திய பிரதேசத்திலுள்ள பிம்பட்கா


13. பாலியோலித்திக் கால கலைகள் எந்த நிறத்தில் இருந்தது?விடை: சிவப்பு மற்றும் பச்சை


14. பிம்பட்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஒவியங்கள் யாவை?

விடை:ஹோமோ செப்பியன் குகைகள் மற்றும் 500 பாறை வாழ்விடங்கள் 


15. நியோ லித்திக் காலம் என்பது என்ன?

விடை: புதிய கற்காலம்  மற்றும் நிலையான  ஓரிடத்தில் தங்கி வாழும் வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *