ஆன்மிகம்ஆலோசனையூடியூபெர்ஸ்

தீராத கடன், குழந்தையின்மை,பில்லி சூனியம் விலக மகா சக்தி வாய்ந்த ஶ்ரீ வாராஹி அம்மன் ஸ்லோகம்

வாழ்க்கையில் தீராத கடன், கணவன் மனைவிக்கிடையே என்றும் சண்டை, கண் திருஷ்டி, குழந்தை இல்லாமல் வாடுதல், ஏவல் பில்லி சூனியத்தால் உண்டாகும் துன்பம் ஆகியவை நீங்க நீங்கள் உச்சரிக்க வேண்டிய மகா சக்தி வாய்ந்த மந்திரம்.

இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே தனி சன்னதி கொண்டு வீற்றிருக்கும் வராஹி அம்மன் மேல் குறிப்பிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் உகந்த தெய்வமாக விளங்குகிறாள். பன்றியின் முகத்தையும் பெண்ணின் உடலையும் கொண்ட வராகி அம்மன் தீராத கடன் பிரச்சனைக்கும் இல்லை சூனியம் போன்ற தீய சக்திகளை ஒழிக்கவும் குழந்தையின்மை கணவன் மனைவி பிரச்சினை போன்ற அனைத்து பிரச்சனைகளை தீர்க்கும் தெய்வமாக விளங்குகிறாள். இத்தனை மகா சக்தி வாய்ந்த வராஹி அம்மன் ஸ்லோகத்தை தினமும் உங்கள் பூஜை அறையில் தீபம் ஏற்றி உங்களின் பிரச்சனைகளை முறையிட்டு மனதார ஸ்லோகத்தை உச்சரித்து வர உங்கள் பிரச்சனைகள் பனி போல் நீங்கிவிடும்.

மஹா சக்தி வாய்ந்த ஶ்ரீ வாராஹி அம்மன் ஸ்லோகம்

அரி ஓம் அரலோக தாண்டவரூபினி சிவ சிவாயி சிங்காசன ரூபி சிவ தாண்டவ சொரூபினி மங்க மங்க மலாகி மலாகி அடி அடி பிடி பிடியம்மா ஆனந்த தாண்டவராகி எட்டெழுத்தில் நின்றாடும் வராஹமுகி வார்த்தாளி வார்த்தாளி வா வா ந ந பார் பார் எதிரேரி பிடியம்மா தாயே வாழையாய் நின்று வரம் தந்தவளே

சக்தி வாய்ந்த ஸ்ரீ வராகி அம்மன் சுலோகத்தை தினமும் உச்சரித்து வர உங்கள் வாழ்வில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கையை வாழ்வீர்கள் நீங்கள் வேண்டும் வரத்தை வராகி அம்மன் உங்களுக்கு அருள் புரிவார். துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்கும். குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் குறைந்து நிம்மதி உண்டாகும். மன கஷ்டங்கள் குறைந்து மன நிம்மதியுடன் வாழ்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *