ஆன்மிகம்ஆலோசனை

ஆன்மிகத் தகவல்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்

ஆன்மிகத் தகவல்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள் பஞ்சாங்கம் என்பதன் பொருள் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனும் ஐந்து அங்கங்களை கொண்டதே பஞ்சாங்கம். பூஜை செய்யும் போது பூ தட்டை மடியில் வைத்து பூவெடுத்து பூஜை செய்யக் கூடாது. வெறும் கையில் பூ பறித்து வந்து அதை இறைவனுக்கு பூஜை செய்தல் கூடாது.

துளசி, வில்வம் இவற்றை செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி, துவாதசி, மாலை நேரம், இரவு நேரம் பறித்தல் கூடாது. வீட்டில் ஸ்வாமியிடம் ஏற்றிய தீபத்தை வாயால் ஊதி அணைக்கக் கூடாது. விரலால் பால் தொட்டு வைத்தோ, குங்குமம் வைத்து அல்லது பூவைக் கொண்டு அமர்த்தலாம். ஆண்கள் அணைப்பது மத்திமம்.

குழந்தைகளுக்கு நதி நட்சத்திரங்கள் மரங்களின் பெயர்களை சூட்டுதல் கூடாது. ருத்ராட்சம், துளசிமணி, ஸ்படிகம் போன்ற மாலைகளை ஜபம், பூஜை, ஹோமம் போன்ற காலங்களைத் தவிர மற்ற நேரங்களில் அணிதல் கூடாது. சுமங்கலி ஸ்திரீகள் இரவில் பட்டினி இருத்தல் கூடாது. கோயிலுக்கு செல்லும் போது பூஜை செய்யும் போதும் பெண்கள் முடியை தொங்கவிடாமல் நுனியை முடித்து போட வேண்டும்.

ஒரு போதும் இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படாத அன்னத்தை உண்ணக் கூடாது. கண்ணனை நினைக்காமல் அன்னத்தை வாயில் போடக் கூடாது. இல்லாதவனுக்கு கொடுக்கும் தானமும், பூஜை இல்லா கோயிலுக்கு பூஜை செய்ய உதவுவதும், அனாதை பிரேம ஸம்ஸ்காரம், அஸ்வமேத பலன்களைக் கொடுக்கும்.

ஒற்றை ருத்ராட்சத்தை கழுத்துக்கு குழிக்கு மேல் கட்ட வேண்டும். கீழே இறங்கக் கூடாது. அது எப்போதும் கழுத்தில் இருக்கலாம். கோயில், புண்ணிய ஷேத்திரம், கர்ப்பவதி, வயதானோர், குரு, குழந்தைகள் உள்ள வீடு இங்கெல்லாம் சென்றால் வெறுங்கையுடன் செல்லக் கூடாது. சூரியன் உதிக்கும் போதும், அஸ்தமிக்கும் போதும் சூரியனை பார்த்தல் கூடாது.

அமாவாசை இரவில் பாலும், பௌர்ணமி இரவில் அரிசி சம்பந்தமான உணவும் சாப்பிடுதல் கூடாது. பூஜைக்கு எந்த சாதனம் கிடைக்கவில்லையோ அதை மனதால் தியானித்து கொள்வதாலேயே பூஜை பூர்ணம் ஆகிவிடும் என்று சொல்லப்படுகிறது.

கங்கை, சமுத்திரம், சேது முதலிய புண்ணிய தீர்த்தங்களில் வீட்டிலோ, மற்ற இடத்திலும் முதலில் ஸ்னானம் செய்த பிறகு தான், ஸ்னானம் செய்ய வேண்டும். நடுத்தர வயது பெண்கள் சிலர் ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது உண்டு. மாதவிலக்கு காலங்களில் ஏகாதசி விரதம் வந்தால் கட்டாயம் உபவாசம் இருக்கலாம். பாவமில்லை புண்ணியமே என்று கூறப்படுகிறது. ஒரு காலினால் மற்றொரு காலை தேய்ப்பது கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *