செய்திகள்தமிழகம்

ஓட்டுக்கு கொலுசு…10 நாள் அவ்வளவு தான்..சீறிய எஸ்பி வேலுமணி..!

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வேளையில் அதிமுகவின் இரும்பு கோட்டையான கொங்கு மண்டலத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என திமுகவினர் இறங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கோவை, சிவானந்தா காலனி பகுதியில் பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செந்தில் பாலாஜி மீதும், காவல்துறையினர் தொடர்பாக விமர்சித்துள்ளார்.

அதாவது திமுகவினர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக , வீடு, வீடாக கொலுசு மற்றும் பணம் கொடுத்து வருவதாகவும், அதனை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்த்து வருவதாக கூறினார். மேலும், தேர்தலுக்கு வந்துள்ள கரூர்காரர்கள் இன்னும் 10 நாட்களில் கரூருக்கே சென்று விடுவார்கள் என்றும், கோவையை அவர்களால் கைப்பற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய வேலுமணி, அதிமுகவின் சாதனைகளை கூறி, தூக்கத்தை விட்டு, வாக்கு சேகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் திமுகவின் வேலைகள் கோவையில் எடுபடாது என்றும், அதனால் அச்சப்படாமல், தெம்புடன் வேலை செய்ய வெஏண்டும் என தொண்டர்களிடம் கூறியுள்ளார்.

பின்னர் காவல்துறையினரை பற்றி கூறியதாவது, காலம் இப்படியே இருந்து விடாது என்ரும், நிச்சயம் மாறும் என தெரிவித்தார். காவல்துறையினர் திமுகவினரை போல் செயல்படாமல் நேர்மையாக செயல்பட வேண்டும் என விமர்சித்தார். கடந்த சில நாட்களாம வேலுமணி காவல்துறையினரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *