செய்திகள்தமிழகம்

அக்டோபர் 2 முதல் தமிழகத்தில் 7 கூடுதல் சிறப்பு ரயில்கள்!

அக்டோபர் இரண்டாம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 7 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை, எழும்பூர், செங்கோட்டை இடையே இரு மார்க்கங்களில் இருந்து தினமும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன. இதே போல் எழும்பூர் – மதுரை இடையே இரு மார்க்கங்களில் தேஜஸ் ரயில் வியாழன் தவிர்த்து மற்ற ஆறு நாட்களும் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளன.

எழும்பூர் – ராமேஸ்வரம் இடையேயும் இரண்டாம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, திருவனந்தபுரம் வழியாக கொல்லத்திற்க்கும், கொல்லத்தில் இருந்து எழும்பூருக்கும், ரயில் இயக்கப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழாவுக்கும், காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா பொது முடக்க தளர்வுகளை தொடர்ந்து தமிழகத்தில் ரயில் சேவை செப்டம்பர் ஏழாம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஏற்கனவே 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. எழும்பூரில் இருந்து நெல்லை மறுமார்க்கத்தில் நெல்லையிலிருந்து எழும்பூருக்கு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளன. இதற்கான முன்பதிவு அக்டோபர் ஒன்றாம் தேதி காலை முதல் தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *