ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

சனிபகவானால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்க..இந்த ஒரு மந்திரம் போதும்..

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் செய்யும் பாவங்களுக்கு தக்க தண்டனை கொடுத்து அவர்களை நல்ல வழியில் செல்ல தண்டனையால் அறிவுரையைக் கூறுபவர் நமது சனி பகவான். இந்து சாஸ்திரப்படி 12 நவகிரகங்களில் ஒருவராக திகழ்ந்தவர் இவர் சூரிய பகவான் சாயாதேவி அம்மாவுக்கு பிறந்த சனிபகவானை 12 நவகிரகங்களில் மிக முக்கியமானவராக திகழ்ந்தவர். சனிபகவான் என்ற வார்த்தையை கூறினாலே அனைவரும் நடுங்கி ஓடுவர். அனைத்து சக்திகளையும் தங்கள் கொண்ட அனைத்தும் அறிந்த கடவுளின் மீது சனிப்பார்வை இல்லாமல் இருக்காது.

சனியைப் போல கொடுப்பவரும் இல்லை சனியை போல கெடுப்பவரும் இல்லை என்று வழக்கமாக கூறுவர். சில பேருக்கு அவர்கள் ராசிப்படி சனி பகவானின் பார்வை பட்டால் கோடீஸ்வரர்களாக ஆகும் வாய்ப்பு கூட கிடைக்கும். ஊரில் நல்ல பெயர், புகழ் , அதிர்ஷ்டம் அவர்களுக்கு வந்து சேரும் ஆனால் சில ராசி அதிபதிகளுக்கு கடுகு அவர்களின் நேரம்படி சனி பகவானின் பார்த்தால் உச்சத்தில் உள்ளவன் கூட தரைக்கு வந்து விடுவான் கோடீஸ்வரன் ஆக வலம் வந்தவன் கூட உண்பதற்கே உணவு இல்லாத அளவிற்கு மிகுந்த எழையாக அனைத்தையும் இழந்து நிற்பான். கோடீஸ்வரனை ஆண்டியாகவும் மாற்றுவான்..ஆண்டியாக இருந்தவனை அனைத்திற்கும் அதிபதியாகவும் மாற்றுவான்..

மேலும் படிக்க : தை மாதம் சிறப்பு விசேஷங்கள்

சனி பார்வையில் ஏழரை சனி,அஷ்டம சனி,ஜென்ம சனி, என பல வகைகள் உண்டு.அது எதுவாக இருந்தாலும் சரி,சனிப்பார்வையால் ஏற்படும் கஷ்டங்கள்,துயரங்கள் ஆகிய அனைத்துமே நீங்கி விடும் என்றால் எப்படி இருக்கும். ஆம் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒரு மந்திரத்தை உச்சரித்தாலே சனி பகவானால் ஏற்படும் கஷ்டங்கள் பனிபோல் நீங்கிவிடும். அவரின் கருணை பெற்று சனி பெயர்ச்சியால் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் சமாளித்து விடலாம்.வாருங்கள் அத்தகைய அரிய மந்திரத்தை நாமும் தெரிந்து கொண்டு சனி பகவானின் சாபத்தை பெறாமல் அவரின் கருணையைப் பெறுவோம் நாமும் நலமுடன் சனி பெயர்ச்சி என்பது கூட வாழ்வோம்…

சனி பீஜ மந்திர ஜபம்

சனி பீஜ மந்திர ஜபத்தை நாம் உச்சரிப்பதன் மூலம் சனி பகவானின் கொடூர பார்வை நீங்கி நமது கஷ்டங்கள் அடையோடு தீர்ந்துவிடும் அவரால் ஏற்படும் நன்மைகள் மட்டுமே நமக்கு வந்து சேரும்.

ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ

இந்த மந்திரத்தை காலையில் எழுந்து குளித்துவிட்டு பயபக்தியோடு சனி பகவானை மனதில் நினைத்துக் கொண்டு 40 நாட்களில் 19000 முறை உச்சரிக்க வேண்டும்.

கடகம்,கும்பம் , மகரம் , மீனம் ஆகிய இராசி உள்ள நபர்கள், சனி திசா புத்தி நடப்பவர்கள் சனி தோஷம் உள்ளவர்கள் ஆகியோர் கண்டிப்பாக இந்த மந்திரத்தை உச்சரித்து வர அவர்களின் துன்பம் அனைத்தும் நீங்கி விடும்..சனி பகவானின் முழு அருளும் கிடைத்து நலமுடன் வாழ்வர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *