சினிமா

சிம்பு-சுசீ பட்டையை கிளப்பும் புது கலவை

சிம்பு ரசிகர்களுக்கு சூப்பரான அப்டேட். பல வருடங்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமப்புற கதையில் நடிக்கப் போகிறார் சிம்பு.

சிலம்பரசன் (எ) சிம்பு பெரும்பாலான காதல் படங்களில் நடித்து ரசிகர்களை காதலிக்க வைத்தார். கௌதம் வாசுதேவ் மேனன் காதல் கதையை புதுவிதமாக கொடுக்கும் இயக்குனர் சிம்புவை புது பார்வையுடன் காண வைத்தார். விண்ணைத்தாண்டி வருவாயா அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களில் பக்கத்து வீட்டு பையனாக பெண்கள் அனைவரும் காதலிக்கும் வண்ணம் இருந்த கதாபாத்திரம் மனதை பறித்தது. ஆண்களுக்கு இவ்வாறும் பெண்களை காதலிக்கலாம் என்று டிப்ஸ் கொடுப்பது போல இருந்தது. பலர் விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திகாவும் அச்சம் என்பது மடமையடா ரஜினிகாந்தாகவும் மாறினர்.

செக்கச்சிவந்த வானத்தில் முன்னணி நடிகர்களுடன் கூட்டமாக பட்டைய கிளப்பு இருந்தார். அதுவே அவரின் சமீபத்திய சூப்பர் ஹிட் படம். முக்கிய கதா நாயகனாக சமயத்தில் பெரிய அளவில் எந்த படமும் வராமல் சற்று இடைவேளை கொடுத்திருக்கிறாரோ என்ற கேள்விக்கு கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் பதிலாக அமைந்தது.

விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக்கை மறுபடியும் சந்திப்பதில் அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஊரடங்கு காலகட்டத்தில் அனைவரும் போரடித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்த குறும்படம் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்புவிற்கு மேலும் சில படங்கள் பட்டியலில் இருக்க தற்போது சுசீந்திரனுடன் இணைகிறார். பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் சிவப்பு ரோஜாக்கள் 2 மற்றும் இயக்குனர் ராமுடன் கைகோர்க்கும் சிம்பு தற்போது சுசீந்திரன் கூறிய கிராமப்புற கதைக்கு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் திரையுலகில் தன் பயணத்தைத் துவங்கிய இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் சசிகுமார் மற்றும் பாரதிராஜா நடிப்பில் கென்னடி கிளப் படம் வரை கிராமப்புற கதைகளில் பிச்சு பெடலெடுத்த இயக்குனர். கிராமப்புற கதையோடு இந்தியாவின் தேசிய விளையாட்டான கபடிக்கும் முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர். சிம்புவுக்கு என்ன விளையாட்டு நிர்ணயித்து இருக்கிறாரோ!

2004-இல் சோனியா அகர்வாலுடன் இணைந்த கோவில் படத்தில் முழுக்க முழுக்க கிராமத்தில் சிம்புவை பார்த்த ரசிகர்களுக்கு தற்போது இந்த படம் மேலும் மகிழ்ச்சி அளிக்கும். மாநாட்டிற்குப் பிறகு எந்த படம் முதலில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்போகிறது என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்க கூடிய விரைவில் சிம்பு அதற்கு பதிலளிப்பார்.

படங்கள் பற்றிய அப்டேடுடன் கூடிய விரைவில் திருமணத்தைப் பற்றியும் தனக்கு வரப்போகிற மனைவியின் பெயரை டிசம்பர் மாதம் அறிவிக்க உள்ளதாக சிம்பு தெரிவித்ததை நாம் முன்பே பார்த்தோம். இரு முக்கியமான செய்திகளுக்கும் ரசிகர்கள் சற்று காத்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *