சினிமா

செப்டம்பர் முதல் திரையரங்குகளை திறக்க அரசு முடிவு

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் ஒவ்வொரு பார்வையாளர் அல்லது குடும்பங்களுக்கும் இடையே குறைந்தபட்சம் மூன்று சீட் இடைவெளி.

முகக் கவசம் அணிவது, சனிடைசர் பயன்படுத்துவது, ஸ்மார்ட்போன் மூலம் டிக்கெட் வழங்குவது, ஒவ்வொரு காட்சிக்கும் இடையே திரையரங்கை கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்துவது.

திரையரங்கின் 3ல் ஒரு பங்கு பார்வையாளர்களை மட்டுமே அனுமதிப்பது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகள் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளன.

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இந்தியாவில் கடந்த ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ள திரையரங்குகளை திறக்க அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அரசு இந்த முடிவினை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகின.

குறைந்த அளவிலான பார்வையாளர்களுடன் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி திரையரங்குகள் அடுத்த மாதம் முதல் இயக்கலாம் என்று கூறப்படுகின்றன.

இந்த விதிகள் திரையரங்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. பல திரைகளைக் கொண்ட மால்களை திறப்பதற்கான முடிவினை அரசு எடுக்கவில்லை என்றும் சொல்லப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *