வணிகம்

கிராமத்தில் இருந்து 2 லட்சம் சம்பாதிக்கலாம் !

நீங்கள் கிராமத்தில் வாழ்பவரா வேலை வாய்ப்பு பற்றி கவலைப்படுபவரா, என்ன செய்யலாம் எது செய்யலாம் என்ற குழப்பத்தில் இருப்பவரா உங்களை சுற்றி பழமையான வாழ்வியல் முறை இருக்கின்றதா அப்படி எனில் உங்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு. மாதம் இரண்டு லட்சம் வரை சம்பாதிக்கும் தொழில் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். என்ன கிராமத்தில் மாடுகளுடன் மரங்களுடன் வாழும் எனக்கு ரெண்டு லட்சம் சம்பாதிக்கிற தொழில் வாய்ப்பா என்று யோசிக்க வேண்டாம்.

கிராமத்தில் இருக்கும் வாய்ப்பு

உண்மையிலேயே இது சரியான வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்க படித்திருக்க வேண்டிய அவசியம் மட்டும் அல்ல நம்மைச் சுற்றி இருக்கும் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்தி சம்பாதிக்கலாம். எளிமையாக சம்பாதிக்கலாம் என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு தான் இது கிராமத்தில் இருப்பவருக்கு இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கடினமல்ல மிகவும் எளிதானதுதான் அது எப்படி ரெண்டு லட்சம் தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

வீட்டுப் பொருட்கள்

நீங்கள் கிராமத்தில் வசிப்பவர்கள் என்றால் உங்களை சுற்றி நிலம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய முதலீடு தொழிலில் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, அப்படி இருக்கும் போது எளிதாக எப்படி பெறலாம் எனில் உங்களை சுற்றி மாடுகள் இருந்தால் மாட்டுச்சாணம் தேங்காய் சிரட்டைகள், வேப்பங்குச்சிகள், வேப்ப இலைகள் மற்றும் சில மூலிகை இலைகள் சில மரக்கட்டைகள் இவைகள் இருந்தாலே போதும்.

முருங்கை பொடி

உங்களால் மாதம் இரண்டு லட்சத்திற்கு மேல் சம்பாதிக்க முடியும் ஆம் முருங்கை மரங்களை பார்த்திருப்பீர்கள் கிராமங்களில் அவை அதிகமாக கிடைக்கின்றன. அவற்றை பொடியாக்கி விற்கும் போது எளிதாக லாபம் பெறலாம் முருங்கை பொடி மிகுந்த சக்தி வாய்ந்தது என்பதால் அதற்கு நகரங்களிலும் வெளிநாடுகளிலும் அதிகமான தேவை இருக்கின்றது. முருங்கை இலையை காய வைத்து பயன்படுத்தும் போது அதன் மதிப்பு கூடுகின்றது.

மாட்டுச் சாண விற்பனை

அதுபோல மாட்டு வறட்டி மாட்டு வறட்டியை எப்படி செய்யலாம். மாற்றுச் சாணத்தில் பெற்று அதில் வறட்டி செய்து விற்கலாம். மாட்டு சாணத்தை வாங்க சந்தையில் பெரும் தேவை இருக்கின்றது. கறித்தூள் சாம்பல் இது எதற்கு பயன்பட போகின்றது என்று நினைக்க வேண்டாம். சாம்பல் நிச்சயமாக தேவைப்படும் ஒன்றுதான் முகத்தை பொலிவு படுத்த என்று சாம்பலை வைத்து தான் தயாரிக்கின்றனர்.

சாம்பல்

சாம்பலை வைத்து நாம் இதனை தயாரிக்கலாம் தேங்காய் சிரட்டை நேரடியாக வாங்க மாட்டார்கள் ஆனால் அதில் நாம் பாலிஸ் செய்து வண்ணங்கள் தீட்டி அவற்றை பவுலாக பயன்படுத்தும் போது அதன் அழகுகளும் அதன் வனப்புக்கும் வசமாகாத மனிதர்களே இருக்க மாட்டார்கள். மேலும் தேங்காய் சிரட்டையில் நாம் பயன்படுத்தி அணிகலன்கள் வளையல்கள் கம்மல்கள் கொடுவைகள் கரண்டிகள் சிறுப்பாத்திரம் போன்றவையும் செய்யப் பயன்படுத்தப்படுகின்றது.

வேப்பங்குச்சி

வேப்பங்குச்சி பல்லுக்கு உறுதி தரும் வேப்பங்குச்சியை வைத்து பல் துலக்கினாள் ஈறுகள் பலமாகும் பற்கள் மிகவும் வலிமையுடன் இருக்கும். பல்லில் இருக்கும் கிருமிகள் அழிந்து விடும். அதனை நன்கு உணர்ந்த பலர் இன்றும் இந்த அதிவேக உலகத்தில் வேப்பங்குச்சியை பயன்படுத்துவோர் அதிகமாக இருக்கின்றனர். வேப்பங்குச்சிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி அவற்றை பாக்கெட்டில் அடைத்து விற்கலாம். நல்ல ஒரு லாபத்தை பார்க்க முடியும். இத்தனை பொருட்களையும் கிராமத்தில் இருந்தே செய்யலாம் இதனை சந்தைப்படுத்த சந்தையில் அமேசான் செல்லிங் ப்ரோக்ராம் மற்றும் flipkart facebook சேல் போன்ற தளங்களில் நாம் விற்பனை செய்யலாம். மீசோ, 101 , போன்ற தளங்களிலும் உங்கள் உற்பத்திப் பொருளை மார்கெட்டிங் செய்யலாம்.

இன்ஸ்டா, பின் ரெஸ்ட், ரீல்ஸ் மூலம் எணற்ற பொருட்கள் இணைய உலகில் வலம் வருகின்றன. அவற்றை நீங்களும் பயன்படுத்தலாம். டிஜிட்டல் முறைகள் பல்வேறு உள்ளன. அவற்றை சரியாக பயன்படுத்தும் விதத்தில் நீங்கள் உங்களுக்கான லாபத்தை பெறலாம். உணவு பொருட்களை தரமானதாக விற்க FSSAI சர்டிபிகேட் எனபடும் உணவு தரகட்டுபாட்டு லைசென்ஸ் பெற வேண்டும். ஜிஎஸ்டி போன்றவைகளுக்கும் விண்ணபித்துப் பெறலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *