செய்திகள்தமிழகம்

சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள்கள் பறிமுதல்..!

சென்னை வெளிநட்டு அஞ்சலக பர்சலில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை விமான நிலைய ஆணையரகத்தின் சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சலக பார்சலில் 32 போதை மாத்திரைகள் மற்றும் 419 கிராம் கஞ்சாவை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் கைப்பற்றினர். இதேபோல், இன்னொரு பார்சலை திறந்த போது அதில் 419 கிராம் எடையுள்ள உலர்ந்த கஞ்சா இலைகள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவின் மதிப்பு ரூ.1.61 லட்சம் என்றும், மேலும் விசாரணை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *