செய்திகள்தேசியம்

தடுப்பூசி இரண்டாம் கட்ட திட்டம் குறித்து அரசியல் கட்சிகள் கோரிக்கை

பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்து அச்சத்தையும் பல்வேறு சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. மாநில முதல்வர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிக்கு இரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போடப்படும் என்ற தகவல் வெளியானது. தடுப்பூசி வழங்குதல் இந்தியா முழுவதும் தொடங்கி விட்டன.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்ஸின் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் படுத்தப்படுகின்றன. கடந்த 16ம் தேதி தடுப்பூசியை முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.

தற்போது நிலவிவரும் அச்சம் காரணமாக அரசியல் கட்சிகள் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தடுப்பூசியை பிரதமருக்கு வழங்க கோரிக்கை விடுத்தன. இரண்டாம் கட்டமாக மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி போடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. துப்புரவு துறை, பணியாளர்கள் மற்றும் வருவாய், காவல்துறையினர், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி இரண்டாம் கட்டமாக போடபடுவதாக தகவல்கள் வெளியானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *