ஆன்மிகம்ஆலோசனை

சனிக்கிழமை விரதம் இருக்க சகல செல்வத்தை பெற்றுத் தரும்

சனிக்கிழமை விரதம் இருக்க சகல செல்வத்தைப் பெற்றுத் தரும். சனிக்கிழமை விரதம் எளிமையானது. பகலில் பழமும், நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்க வேண்டும்.

அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று எள் கலந்த நல்லெண்ணெயில் தீபமேற்ற வேண்டும். சனிக்கிழமை விரதம் எல்லா மதங்களிலும் கடைபிடிக்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமை மிகவும் விசேஷமானது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டுமென்றால் சனிக்கிழமைகளில் விரதத்தை கடைபிடிக்கலாம். சனிக்கிழமை பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால் சனி பகவான் கொடுக்கும் சங்கடத்தில் இருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மை காத்தருள்வார்.

நவக்கிரகங்களில் சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரது ஆதிக்கத்தை பொறுத்து ஆயுள்காலம் அமையும்.

இந்த கிரகத்தை கட்டுப்படுத்துபவர் ஆக இருப்பவர் பெருமாள். சனிக்கு அதிபதியும் பெருமாள். பெருமாளுக்கு உகந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. இதனால் சனிக்கிழமை விரதத்தை அனுஷ்டித்தால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும்.

மகாவிஷ்ணு தசாவதாரங்கள் எடுத்த பின்பும் குறிப்பாக கண்ணனாக அவதரித்து கீதையை உபதேசித்து வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைத்த பிறகும் உலகில் பாவங்கள் குறையவில்லை. பாவங்கள் குறைந்து நீண்ட ஆயுள் வேண்டும் என்று எண்ணும் மனிதனுக்கு இந்த சனி விரதமே பரிகாரம்.

கடவுளுக்கு விரதம் இருப்பது. நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காகத் தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. இவை அனைத்தும் பரிபூரணமாக பெறுவதற்கு சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *