ஆன்மிகம்ஆலோசனை

நினைத்தது நடக்க இதை செய்யுங்க

நினைத்தது நடக்க நாம் பல்வேறு வழிகளை பின்பற்றி வருவோம். எளிதான சில வழிமுறைகளை நம் வாழ்வியலில் கடைபிடித்தல் நல்லது தரும். நினைத்தது நடக்க வழிமுறைகளை கொடுத்துள்ளோம் அதை செய்யுங்கள் எண்ணியது எல்லாம் செயலாகும்.

முன்னோர் வழிமுறைகள்


நினைத்தது உடனே நடக்க நமது முன்னோர்கள் பின்பற்றிய சில வழிமுறைகளை இங்கு தொகுத்து கொடுத்துள்ளோம். அவற்றைப் பின்பற்றுங்கள் ஒரு மஞ்சள் கிழங்கு வெற்றிலை வைத்து நாம் வேண்டியதை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு தேவையான பொருட்களை கீழே கொடுத்துள்ளோம்.

செய்முறை

ஒரு மஞ்சள் கிழங்கு வெற்றிலை மற்றும் ஸ்கெட்ச் ஆகியவை தயாராக வைத்து செய்ய வேண்டும். வெற்றிலையில் வேண்டியதை ஸ்கெட்சில் எழுதி மஞ்சள் வைத்து நூலில் கட்ட வேண்டும். கருப்பு நிற ஸ்கெட்ச் பயன்படுத்தகூடாது. மற்ற்வருக்காக செய்தால் நன்றாக வேண்டிக் கொண்டு காரியம் வெற்றி பெற உறுதியோடு வேண்டிக் கொண்டு வேண்டுபவருடைய பெயர் எழுத வேண்டும். வேலை வேண்டும் எனில் வேலைக்காகவும், திருமணம் நடக்க வேண்டும் என்று திருமணம் என நமது விருப்பங்களை எழுதி அதனை மஞ்சள் கிழங்கு வைத்து நூல் கட்டி பூஜை அறையில் பிரார்த்தனை செய்து வைக்க வேண்டும்.

மேலும் படிக்க : நம் ஆரோக்கியம் நம் கையில் தானே இதோ உங்களுக்கான டிப்ஸ்

உறுதியுடன் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் வெற்றிலையை வைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். தினசரி அதனைத் தொட்டு வணங்கி நமது வேண்டுதலை முன்னிறுத்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தவர நமது பிரார்த்தனை மற்றும் நம்பிக்கை நேர்மறையான சிந்தனை, முயற்சியும் சரியாக இருக்கும் பட்சத்தில் ஒரு வாரத்தில் நாம் வேண்டியது கிடைக்கும். இந்த பிரபஞ்சம் அதனை நமக்கு கொண்டு வந்து கொடுக்கும் உறுதியான மன எண்ணத்துடன் நாம் வேண்டுதல் வைக்கும் போது நிச்சயமாக மூன்று வாரங்களில் எவ்வளவு பெரிய கடின காரியங்களும் இறையருளால் நடத்தி வைக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *