அழகு குறிப்புகள்வாழ்க்கை முறைவாழ்வியல்

அரிசி மாவு இருக்கா நீங்கதான் அழகு ராணி

உங்கள் முகம் வெள்ளையாக பல பலவென்று மாற வேண்டுமா அதற்கு எளிய முறை இங்கு கொடுத்துள்ளோம். இந்த சிம்பிள் டிப்சை பயன்படுத்தி வீட்டிலேயே செய்யலாம். பெண்கள் எல்லோருக்கும் பார்லர் செல்லும் நேரமோ, பொருளாதார வசதியிருக்காது. ஆனால் வீட்டில் இருக்கும் பொழுது, வெளியே செல்லும் பொழுது அழகு, பொலிவுடன் இருக்கும் ஆசை இருக்கும்.

நமக்கு நாமே

எங்கும் எப்பொழுதும் நமக்கு நாமாக இருக்க வேண்டிய எண்ணத்தை செயல்பாட்டில் காட்ட வேண்டும். பெண்களான நாம் நம்மை பராமரித்து நமக்காக வாழ வேண்டும். நமக்காக நேரத்தை செலவழிக்க வேண்டும். இந்த உறுதிபாடு இருக்கும் பெண்ணாக நாம் இருப்போம். என்னம்மா இது ஒரு அழகு பராமரிப்புக்கு எதுக்கு இத்தனை அக்கறை என்று கேக்க தோனுதா நிச்சயம் எண்ணம் உருவாக வேண்டும்.

உறுதி எண்ணம்:

அந்த உறுதியான எண்ணத்தை வைத்து நம்மை பராமரிக்கலாம் என்று களம் இறங்கும் பெண்களே வீட்டில் இருக்கும் சின்ன சின்ன பொருளை வைத்து நம்மை நாம் க்ரூம் செய்வோம் வாங்க, வீட்டில் இருக்கும் தயிர் 2 ஸ்பூன், காட்டன் துணி, அரிசி மாவு, இவை மூன்று அனைவரது வீட்டிலும் இருக்கும்.

செய்முறை

முகத்தை கட்டியான தயிர் வைத்து நன்கு மசாஜ் கொடுக்கவும். கண்ணங்களை மேல் நோக்கி மசாஜ் செய்து பின் காட்டன் துணி கொண்டு துடைத்து விடவும். மீண்டும் கட்டியான தயிருடன் அரிசி மாவு சேர்த்து நன்கு மசாஜ் செய்து, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் தேவையற்ற அளக்குகள் வெளியேறுமாறு துடைக்கவும். பின் முகம் பளிச்சென்று இருக்கும் இதனை உங்க வீட்டில் செய்து பார்த்து கண்ணாடியில் பாருங்கள். கொரியன் பொண்ணுங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் ஃபேஸ் பேக் கிளென்சிங் என்றால் அது அரிசி மாவுதான். இனிமேல் நாம் அனைவரும் அழகு ராணிதான்.

இப்படிக்கு

வளர்மதி (வளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *