அழகு குறிப்புகள்வாழ்க்கை முறை

முகத்தில் மருக்கள் இருக்கிறதா? கவலைய விடுங்க!

தற்போது சூழ்நிலையில் 30 வயதிற்கு மேல் முகத்தில் மரு காணப்படும். சிறுவயதில் கூட சிலருக்கு வருவதுண்டு. எளிய பொருட்களை வைத்து வீட்டிலேயே இவற்றிற்குத் தீர்வுகாண முடியும். ஆப்பிள் சீடர் வினிகரை மருக்கள் மீது தடவி காட்டன் வைத்து தேய்த்து காய வைத்து கழுவ நாளடைவில் உதிர்ந்துவிடும்.

எலுமிச்சை சாறை சிறிது அதன் மேல் வைத்து காய வைத்து கழுவி வரலாம். பைனாப்பிள் சாறு எடுத்து மரு மீது தடவி காயவைத்து சுடுநீரில் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வர 10 நாட்களுக்குள் பலன் கிடைக்கும். அம்மான் பச்சரிசி இலையின் காம்பினை ஒடிக்கும் போது வரும் பால் இதன் மேல் பூசி வரலாம்.

இஞ்சி சாறு சிறிது தினமும் அப்ளை செய்து கழுவி வர நாளடைவில் உதிர்ந்துவிடும். வெங்காய சாறு எடுத்து சிறிது உப்பு கலந்து அப்ளை செய்து காயவிட்டு கழுவலாம். கற்றாழையின் உள்பகுதி அரைத்து அந்த ஜெல்லை மருக்கள் மீது போடலாம். தினமும் இதை தடவி வரலாம். இந்த எளிய பொருட்களை வைத்து வீட்டிலேயே செய்ய மருக்கள் நாளடைவில் மறைந்து விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *