செய்திகள்

உஷார்…தமிழகத்திற்கு ரெட் அலர்ட்….!

தமிழகத்தில் இந்த நாட்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்றும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுவை ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 4ஆம் தேதி அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற 3ஆம் தேதி, தமிழக கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் இரு முறை மட்டுமே மார்ச் மாதத்தில், அதீத மழை பொழிவு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *