செய்திகள்தமிழகம்

பிரபலங்கள் உட்பட மின்வாரியம் அதிக அளவு மின் கட்டணம் வசூலிப்பதாக குற்றசாட்டு

ஊரடங்கு காரணமாக மக்கள் 18 முதல் 20 மணி நேரம் வீட்டில் இருப்பதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் பலரும் ஊரடங்கு காலத்தில் தங்களது வீடுகளுக்கு மின்வாரியம் அதிக அளவு மின் கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இவர்களின் பெருவாரியான நேரமானது வீட்டிலேயே கழிந்து வருவதன் காரணமாகத்தான் இவர்கள் மின்சார பயன்பாடு முன்பைவிட அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் மின்கட்டணம் உயர்கிறது என தெரிகிறது.

ஊரடங்கு காரணமாக மக்கள் 20 மணிநேரம் வீட்டில் இருக்க கூடிய காரணமே மின்கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

கூடுதலாக மின்கட்டணம் செலுத்த வேண்டியிருப்பது ஏன் என்ற கேள்விக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் இவ்வாறு பதிலளித்துள்ளது.

இரண்டு மாதம் அளவில்தான் கணக்கெடுப்பு செய்கிறோம் என அரசு தெரிவித்தாலும், நடைமுறையில் நிறையவே குழப்பம் உள்ளது தெரிகிறது.

இதை சரி செய்ய அரசு முன் வருமா அல்லது முழு கட்டணத்தையும் கட்ட வேண்டும் என்று அரசு தொடர்ந்து கட்டணத்தை வசூல் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கத் தான் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *