செய்திகள்தமிழகம்

நாளை ரேஷன் கடைகள் இயங்காது…!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை ரேஷன் கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, ஆயில் உள்ளிட்ட த்தியாவசிய பொருட்கள் குறைந்த விலை ரேஷ்ன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் சுமார் 3 கோடி மக்கள் ரேஷன் கடைகளால் பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது.

கலைஞர் டிவி, அம்மா மின் விசிறி, கிரண்டர் ஆகிய அரசின் நலத்திட்ட உதவிகள் எதுவாக இருந்தாலும் ரேஷன் அட்டையின் அடிப்படையிலையே வழங்கப்பட்டு வருகிறது. அப்படியாக முக்கியத்துவம் பெற்றுள்ள ரேஷன் கடைகள் மாதத்தின் முதல் மற்றும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் செயல்படாது. ஆனால் கடந்த ஜனவரி மாதம் அரசு சார்பில் மக்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.

18 பொருட்கள் அடங்கிய அந்த பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் இந்த ஆண்டு தாமதமாக ஜனவரி மாதம் தான் தொடங்கியது. அதனால் ஜனவரி 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரேஷன் கடைகள் அனைத்தும் செயல்பட்டது. அன்று விடுமுறை வழங்கப்படாததால் அதற்கு மாற்று நாளாக நாளை (மார்ச் 19) விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை தமிழக ரேஷன் கடைகள் எதுவும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *