செய்திகள்

எலக்ட்ரிக் நானோ கார்:- டாடா சூப்பர் அறிவிப்பு..!

இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக டாடா குழுமம் உள்ளது. இந்ந்லையில் நடுத்தர வர்க்க மக்களும் கார் வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு டாடா நிறுவனத்தால் குறைவான விலையில் நானோ காரை வெளியிட்டது.

இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இது எப்படி சாத்திய, என கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் சில இடங்களில் காரில் சில பிரச்சனைகள் எழுந்தன.இதனையடுத்து அந்த பிரச்சனைகளை நிறுவனம் களைந்தது.

இதனைதொடர்ந்து டாடா நிறுவனத்தின் நானோ காரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சேர்க்கும் வகையில் நானோ எலக்ட்ரிக் கார் தயாரிக்கவுள்ளதாக ரத்தன் டாடா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வெளியான அறிவிப்பில், ரத்தன் டாடா மற்றும் அவரது இளம் உதவியாளர் சாந்தனு நாயுடுவுடன் காரின் படம். வணிக நெட்வொர்க்கிங் தளமான LinkedIn இல் வெளியிடப்பட்டது. மேலும் இது ஒரு நெகிழ்சியான தருணம் என அவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசின் வசம் இருந்த ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியது. இதனையடுத்து மஏர் இந்தியா பயணிகளிடம் பதிவு செய்யப்பட்ட செய்தியில் ரத்தன் டாடா கூறுகையில், “ஏர் இந்தியாவின் புதிய வாடிக்கையாளர்களை டாடா குழுமம் வரவேற்கிறது, மேலும் ஏர் இந்தியாவை பயணிகளின் வசதி மற்றும் சேவையில் விருப்பமான விமான நிறுவனமாக மாற்ற இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறது என்று பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *