ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

எல்லா துன்பங்களும் நீங்க இந்த ஒரு வழிபாடு மட்டும் போதும்…

பிரச்சனை இல்லாத வாழ்க்கையே ஒரு மனிதனுக்கு இருக்க முடியாது அனைவர் வாழ்விலும் ஏதாவது ஒரு துயரம் இருக்கும். துன்பம் துயரம் கஷ்டம் வறுமை யாவும் நீங்க எந்த ஒரு வழிபாட்டை தொடர்ந்து 20 நாட்கள் செய்து வந்தால் கண்டிப்பாக அனைத்தும் விலகி ஒரு செழிப்பான வாழ்வை வாழலாம். எல்லாம் வல்ல இறைவன் சிவனின் பாதம் அடைந்தாள் ஒருவனின் கர்ம வினைகள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே.. எதையும் நாம் எளிதில் பெற்று விட முடியாது . ஒன்றை அடைய நாம் பல சோதனைகளை கடந்து வர நேரிடும் .அவ்வாறே சிவனின் வழிபாடும், முதலில் அவன் பல சோதனைகளை நமக்கு தருவான் அதை அனைத்தையும் தாங்கி அவன் பாதம் சரணடைந்தால் அவன் கொடுத்த துன்பங்களை விட அதிக நன்மைகளை தருவார்.

எனவே முழு இறை பக்தியோடு வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் எம்பெருமான் சிவபெருமானை வழிபட்டு வரவேண்டும்.

வழிபாட்டு முறை

எம்பெருமான் சிவபெருமானே வழிபடும் முறையாவது உங்களது அருகில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று நெற்றியில் திருநீறு அணிந்து, ஓரிடத்தில் அமர்ந்து மனம் முழுவதும் சிவபெருமானின் நாமம் முழங்க ,வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் சிவபராணத்தை படித்து வர வேண்டும் …மனம் உருகி நீங்கள் சத்தமாக சிவபராணத்தை பாடுவதிலும் தவறில்லை.

கோவிலுக்கு செல்லும்போது வாழைப்பழம் தேங்காய், கற்பூரம் ஊதுபத்தி போன்றவற்றை சிவபெருமானுக்கு வாங்கி செல்லலாம். தன்னை நாடி வரும் பக்தர்கள் தனக்காக என்ன கொண்டு வருகிறார்கள் என்பதை சிவபெருமான் ஆசையாக ஒவ்வொரு பக்தனிடமும் எதிர்பார்த்து காத்திருப்பாராம்.

இவ்வாறு சிவபெருமானுக்காக நீங்கள் வாங்கி சென்று பொருளை படைத்து அவரை நினைத்து சிவபுராணத்தை பாடி முடித்துவிட்டு உங்கள் மனதில் உள்ள குறைகள் அனைத்தையும் சிவபெருமானின் பாதங்களில் இறக்கி வைத்து விடுங்கள்… அவன் இடை இடையில் பல சோதனைகளை உங்களுக்கு தருவான் ஆனால் அனைத்தையும் தாண்டி நீங்கள் 21 நாட்கள் தொடர்ந்து வழிபட்டுவர அனைத்து துன்பங்களும் நீங்கி உங்கள் வாழ்வு வளமாகும் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும்.மன மகிழ்ச்சி ஏற்படும். கடன் தொல்லை, வாழ்வில் ஏற்பட்ட துன்பம் போன்றவை நீங்கி நலமான வாழ்வு வாழலாம்….

மேலும் படிக்க : கல்விஞானத்தையும் செல்வத்தையும் பெறுவதற்கு இவரை வழிபடுங்கள்

தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வர உங்கள் வாழ்வில் நடக்கும் மாற்றத்தையும் ஏற்படும் நற்பலன்களையும் நீங்களே உணர்வீர்கள்.. சிவபெருமானின் பாதம் சரணடைந்து அனைத்து பயன்களையும் பெற்று நல் வாழ்வு வாழுங்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *