ஆன்மிகம்ஆலோசனை

Narasimma mantra: பலநாள் நடக்காத காரியத்தையும் எளிதில் நடத்திக் காட்டும் நரசிம்ம மந்திரம்

நாம் ஒரு வேலை செய்வதற்காக பல நாட்களாக முயற்சி செய்து கொண்டிருப்போம். ஆனால் அந்த வேலையை தொடங்கும் பொழுதெல்லாம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே இருக்கும். நாம் ஒன்று நினைக்க அது ஒன்றாக நடக்கும் என்பது போல எப்பொழுதும் நீங்கள் நினைத்ததற்கு எதிர்மறையாகவே பல விஷயங்கள் நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த எதுவும் எளிதில் உங்களுக்கு கிடைக்காமல் எப்பொழுது நாம் நினைத்த காரியத்தை நிறைவேற்ற போகிறோம் என்று பல நாள் கவலைப்பட்டிருப்பீர்கள்.

நானும் என்னென்னவோ செய்து பார்க்கிறேன் ஆனால் நான் நினைத்தது மட்டும் இதுவரை நிறைவேறவில்லை என்று மனக்கவலையுடன் உள்ளவர்களுக்கு ஓர் அதிர்ஷ்ட மந்திரமாக மகா சக்தி வாய்ந்த வரிகளாக உங்களுக்கு இருக்கும். இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரிக்கும் பொழுதே உங்களுக்குள் ஏதோ ஒரு புத்துணர்ச்சி உண்டானதை உணர்வீர்கள். மனக்கவலை நீங்கி தைரியம் பிறக்கும்.

நடக்காததை எளிதில் நடத்திக் காட்டும் நரசிம்ம மந்திரம்

பல நாள் நீங்கள் நினைத்தும் நடக்காத காரியத்தை மிக எளிதில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியை தரக்கூடிய மஹா சக்தி வாய்ந்த மந்திரமாக இருக்கும்.

யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே.

மந்திரத்தின் பொருள்

பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!! தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகு மென்று தூணில் அவதரித்தவனே !! நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவனே !! லட்சுமி நரசிம்மனே!! உனது திருவடியைச் சரணடைகிறேன்!!

மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் மந்திரத்தின் பொருளை மட்டும் கூறினால் கூட முழு பலனும் கிடைக்கும். ஸ்லோகத்தை சொல்லும் ஒவ்வொரு நாளும் அதன் மகிமையை நீங்களே உணர்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *