ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

பரம எதிரியை கூட நண்பனாக மாற்ற உதவும் மந்திரம்

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நண்பன் பல பேர் இருந்தாலும் எதிரி என ஒருவர் கூட இல்லாமல் இருக்க மாட்டார்கள்.தினமும் அவர்கள் செல்லும் பாதையில் பல தடைகளை தாண்டியும் பல பேரின் சதிகளை தாண்டியும் தான் கடந்து செல்ல வேண்டியுள்ளது. ஒரு எலிக்கு பூனை எதிரியாக உள்ளது பூனைக்கு நாய் எதிரியாக உள்ளது. பாம்பிற்கு பருந்து எதிரியாக உள்ளது.இப்படி மனிதனுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு உயிருக்கும் இன்னொரு உயிர் ஏதாவது ஒரு வகையில் தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளது.

எதிரிகள் என்பவர் உங்களுக்கு பரம எதிரியாகவோ பழிவாங்கும் குணம் கொண்டவராகவோ நேருக்கு நேர் போற்றுவிடும் கொண்டவர் மட்டும்தான் எதிரி என்று நாம் சொல்லிவிட முடியாது கண்ணுக்கு தெரியாத பல எதிரிகள் கூட நம்மை சுற்றி இருந்து கொண்டே தான் இருப்பார்கள் ஏன் நண்பர்களே சில சமயங்களில் அவர்களையே அறியாமல் நமக்கு எதிரியாக மாறும் வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் எப்படி எதிரியாக மாறுவார்கள் அதுவும் அவர்களுக்கே தெரியாமல் என்று யோசிக்கிறீர்களா மிக நெருங்கிய நண்பர்களாக இருக்கும் நீங்கள் ஒரு இரண்டு பேர் ஒரே கம்பெனியில் ஒரே பணியில் வேலை செய்து கொண்டு உள்ளீர்கள் திடீரென உங்கள் உங்களுக்கு பணி உயர்வு கிடைக்கிறது உங்கள் கூடவே இருக்கும் உங்கள் நண்பன் அதே இடத்தில் இருக்கிறார் அப்படி என்றால் அந்த சமயம் அவன் உங்களுக்கு எதிரியாகிறான்.

இவ்வாறு நமக்கு தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் எதிரிகளை கூட உங்கள் நண்பர்களாக மாற்றும் ஒரு எளிய வழியை இப்போது நாம் காண்போம் இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்து வர உங்களுக்கு நடக்கும் தீய செயல்கள் நீங்கி அனைவரும் உங்களுக்கு உதவும் நண்பர்களாக மாறுவார்கள் வாருங்கள் அத்தகைய அரிய மந்திரத்தை காணலாம்.

ஓம் பூர்வகபிமுகாய பஞ்சமுக ஹனுமதே டம் டம் டம் டம் டம் சகல ஸத்ரு நிவாராணாய ஸ்வாஹா

காலையில் எழுந்து குளித்துவிட்டு பயபக்தியுடன் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு பின்பு இந்த மந்திரத்தை 27 முறை உச்சரித்து விட்டு நீங்கள் வெளியே செல்லும் பொழுது உங்களுக்கு அனைத்தும் நன்மையாக நடக்கும்.கண்டிப்பாக இந்த மந்திரம் உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் இதனை பயபக்தியுடனும் நம்பிக்கையுடனும் நீங்கள் உச்சரிக்கும் பொழுது மந்திரத்தின் பலனை நீங்கள் முழுவதுமாக அடைவீர்கள். உங்கள் எதிரிகள் அனைவரும் உங்களுக்கு நண்பர்களாக மாறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

மேலும் படிக்க : வீட்டிற்கு உண்டான வாஸ்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *