செய்திகள்தமிழகம்

போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு

மத்திய அரசு ஜனவரி 17 தொடங்கி 19 வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கும் என தெரிவித்து இருந்தது. தற்போது கொரோனா தடுப்பூசி போட வேண்டிய பணிகள் ஜனவரி 16 தொடங்க இருப்பதால் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மறு அறிவிப்பு வரும் வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நாடு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

மத்திய அரசின் அறிவிப்பின்படி போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்திலும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் செயலர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருந்து முகாம் தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *