சினிமாசினிமா பாடல்கள்செய்திகள்தமிழகம்

ஆத்தி..ஒரு நாள் முழுசா குதிரை மேலேயே இருந்த நடிகர்..

பிரம்மாண்ட படைப்பாக கற்பனை கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கிறார் நமது மணிரத்தினம். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்தினம் சாரின் பல ஆண்டு கனவாகும். அந்த கனவை இப்போது நனவாக்கி உள்ளார் இவர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸ் ஆவது குறித்து அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளனர் நமது சரித்திர இந்திய கலாச்சார மிக அற்புதமான பொன்னியின் செல்வன் நாவல் படமாக திரைக்கு வரப்போகிறது என்றால் யார் தான் எதிர்பார்க்காமல் இருப்பர் இந்நிலையில் இப்படத்தில் பல முன்னணி நாயகர்கள் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் ஆனால் ரசிகர்கள் மத்தியில் பொன்னியின் செல்வர் போன்ற சரித்திர நாவலை கற்பனை கதாபாத்திரமாக பார்த்துக் கொண்டு படிப்பதை மிகச்சிறந்தது அதனை படமாக காட்ட வேண்டாம் என்று பல பேரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் ஆனாலும் மணிரத்தினத்தின் பல ஆண்டு கனவான இப்படத்தை அவர் இரண்டு பாகங்களாக பல எதிர்ப்புகளையும் மீறி பல இன்னல்களை தாண்டி தற்போது இயங்கிக்கொண்டு உள்ளார் இதனை இவர் இரண்டு பாகங்களாக எடுக்க உள்ளதாக கூறியுள்ளார் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் இப்படத்தின் பட்ஜெட் ரூபாய் 800 கோடியை தாண்டி விடும் என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க : திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல் ஆக வாய்ப்பு ரசிகர்கள் கொண்டாட்டம்

இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொன்றாக சமூக வலைதளங்களில் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது ஒவ்வொரு கதாபாத்திரத்தை பார்க்கும் பொழுதும் ரசிகர்கள் மிக உற்சாகத்துடன் அதனை பார்த்து வருகின்றனர் கண்டிப்பாக திரைப்படம் சரித்திர படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அவ்வளவு உழைப்பும், அனைவரின் கனவும், ஒவ்வொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களும் அந்த கதாபாத்திரமாகவே மாறி தங்களது முழு திறமையையும் இதில் காட்டி வருகின்றனர்.

இதில் நடிகர் விக்ரமும் சோழ பட்டத்து இளவரசர் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு நாள் இவர் திரைப்பட ஷூட்டிங் இருக்கும் போது காலை 7 மணிக்கு குதிரை மேல் ஏறிய இவர் பல்வேறு வசனங்களை பேசி நடித்து மாலை 5 மணி வரை குதிரை மேலேயே அமர்ந்துள்ளார்.

மேலும் படிக்க : மாணவர்களுக்காக களமிறங்கியுள்ள சோனு சூட் !

இவரின் நடிப்பின் திறனையும், விக்ரமின் டெடிகேஷனையும் இதிலிருந்து அனைவரும் தெரிந்து கொள்ளலாம் என்று நடிகர் நிழல்கள் ரவி பெருமையாக கூறியுள்ளார். விக்ரமின் கடின உழைப்பை பார்த்து அவரது ரசிகர்களும் மெய்சிலிர்த்து பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *