சினிமாசின்னத்திரை

PS -2 update : வணக்கம் சாமிஜி, எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க….

நமது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடி கொண்டு உள்ளது சரவணனுக்கு திருமணம் ஆகவேண்டும் என குடும்பமே மாறி மாறி சபதம் எடுத்துக்கொண்டு வருகின்றனர். முதலில் பாண்டியன் செருப்பு போட மாட்டேன் என சபதம் எடுத்தார் இப்பொழுது செந்தில் எடுத்த சபதம் என்ன என்று பார்க்கலாம்.

சரவணனை கலாய்த்து தள்ளும் மீனா மற்றும் ராஜி

வீட்டிற்கு வந்த சரவணன் மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் மாறி மாறி கலாய்த்து வருகின்றனர் காலையில் சாமியாராக போகிறேன் என்று சொன்னதை வைத்து எங்களை இப்போது ஆசிர்வாதம் பண்ணுங்கள் சாமி. நீங்கள் ஆசீர்வதித்தால் நாங்கள் நினைத்தது நடக்கும் நீங்கள் கண் மூடினால் உங்கள் கையில் விபூதி வருமா எலுமிச்சம் பழம் வருமா என மாறி மாறி விடாமல் கலாய்த்து வருகின்றனர் சரவணன் ஐயோ இவங்க கிட்ட போய் மாட்டிக்கிட்டேனே என புலம்பி நிற்கிறார்.

Matrimony இல் பெண் பார்க்க ஒத்துக் கொண்ட பாண்டியன்

சரவணனுக்கு மேட்ரிமோனியில் பெண் பார்ப்பது குறித்து பாண்டியனிடம் சொல்லும் பொழுது முதலில் அவர் ஒத்துக் கொள்ளவில்லை பின்பு மீனா செந்தில் கோமதி என மாறி மாறி அனைவரும் அதைப் பற்றி சொல்ல கடைசியில் சரி என்று ஒப்புக் கொண்டார். குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த விஷயத்தை கேட்டு மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.

அடுத்த சபதம் போடும் செந்தில்

ஒரு வழியாக மீனா மற்றும் செந்தில் சண்டை முடிந்து வட்டது. மீண்டும் இருவரும் சேர்ந்து விட்டனர் என்று எண்ணத்தில் மீனா ஆசை ஆசையாக செந்திலிடம் பேச வருகிறார் ஆனால் அவர் ஒரு புது சபதம் போட்டுள்ளதாக தெரிவிக்கிறார். 48 நாட்கள் விரதம் இருந்து குன்னக்குடி முருகனுக்கு வேண்டுதலை நிறைவேற்றுவதாக கூறுகிறார் எனவே நிலவ அருகில் வர வேண்டாம் எனவும் தொட வேண்டாம் எனவும் ஒரே கூட்டமாக மாடிக்கு ஓடி விடுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியான மீனா என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே உடைந்து போய் விடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *