செய்திகள்தமிழகம்தேசியம்

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் மார்ச் 31வரை நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மார்ச் மாதம் முதல் இருப்பதால் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்து இருப்பதாக வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

மார்ச் 31ஆம் தேதி இணைக்கப்படவில்லை என்றால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

வருமான வரியை செலுத்துவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரி ஆணையம் அறிவித்தது.

இதற்கான கால அவகாசம் வழங்கி பலமுறை கால நீட்டிப்பு செய்துள்ளது. கடைசியாகப் ஏன் பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31, 2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரி ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. ஒருவரே பல பான் கார்டுகளை வைத்துக்கொண்டு மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வந்தது.

வருமான வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்துள்ளன, ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வந்துள்ளது,

இதனைத் தொடர்ந்து பான் எண்கள் உடன் ஆதார இணைக்கா விட்டால் அவர்களின் பான் கார்டை செயல்பாட்டில் இருந்து நீக்குவதாக பயனற்றதாகி போய்விடும் என எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆதார் எண்ணை இணைப்பதற்கான தேதியை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வருமானவரித்துறை தற்போது அறிவித்துள்ளது.

ஆதார் எண் இணைப்பு அடுத்த ஆண்டு மார்ச் வரை கால அவகாசம் நீட்டிப்பு உள்ளதால் அதற்குள் இது சம்பந்தமான வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும்.

முதலில் வருமான வரியின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் incometaxindiaefiling.gov.in  செல்ல வேண்டும். இங்கிருந்து இணைப்பு ஆதார் என்பதை கிளிக் செய்து.

கீழே உள்ள பெட்டியில்ஆதார் எண். உங்கள் பெயர் மற்றும் கொடுக்கப்பட்ட கேப்ட்சா டைப் செய்து. அனைத்து நடைகளையும் fill செய்த பிறகு இணைப்பு ஆதார் என்பதை கிளிக் செய்யுங்கள்.

read/ sms மூலமாக பான் கார்டுடன் ஆதார் அட்டையை எவ்வாறு இணைப்பது என்ற முழுவிபரம் வரும் இப்போது தான் ஆதார் இணைக்கப்படும்.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பெயர் அல்லது எனில் எந்தவிதமான இடையூறும் இருக்கக் கூடாது. இது தவிர பான் மையத்திற்கு செல்வதன் மூலம் ஆதார் பான் கார்டுடன் இணைக்க படும் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையின் புகைப்பட நகலை 25 ரூபாயிலிருந்து 110 ரூபாய் வரை கொடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *