செய்திகள்

காரில் குடியும் கும்மாளமுமாக..!! பிரதமரின் மகனை கைது செய்தது போலீஸ்..!!

காரில் வைத்து மதுபானங்களை கடத்தியதாக பாகிஸ்தானில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானின் வளர்ப்பு மகனை போலீஸ் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் மனைவி புஷ்ரா பீவி ஆவார். இவர் இம்ரான் கானை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக, தனது முன்னாள் கணவருடன் மூஸாவை பெற்றெடுத்தார். மூஸா தற்போது இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீவியுடன் வசிப்பதாக கூறப்படுகிறது.

தற்போது ரஷ்ய அதிபரை சந்திப்பதற்காக, இம்ரான் கான் ரஷ்யா சென்றுள்ள நிலையில், காரில் மதுபானம் வைத்து கடத்தியதாக இந்த மூஸா மேனகா மற்றும் அவருடன் மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்ட தினமே அவர்கள் யார் என்று தெரிந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தானில், மது விற்பனை மற்றும் நுகர்வு சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *