விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பு

கொரோனா உறுதியான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட கவனிக்க படுவார்கள். நெகட்டிவ் என வந்த வீரர்கள் அனைவருக்கும் 25-ம் தேதி மீண்டும் பரிசோதனை செய்து திட்டமிட்டபடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பு.

ஹரிஸ் ராஃப், ஹைதர் அலி, சதாப்பு கான் ஆகிய மூன்று பேரும் ஏற்கனவே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் நட்சத்திர வீரர் முகமது ஹஃபீஸ், வஹாப் ரியாஸ், ஃபக்கர் சமான் உள்ளிட்ட 7 பேருக்கு தோற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை என கூறப்பட்டுள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மாதம் 28ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அவர்களது உடல் தகுதி குறித்த அறிக்கை அளிப்பதற்கு 35 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்த 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. கொரோனா வைரஸ் மீறி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிகப்பெரிய சவாலாக உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நாளை இங்கிலாந்து சுற்றுப்பயணம். மேற்கொள்ள இருப்பதால் அங்கு மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட இருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *