செய்திகள்தமிழகம்

கொரோனா டிஸ்சார்ஜ் அதிகமாகி விட்டது.. ஆறுதலை அளிக்கிறது..

தமிழகத்தில் முதல் முதலாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அட்மிஷன் நோயாளிகளை விட அதிகமாகி விட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இது நமக்கு ஆறுதலை அளிக்கிறது.

இதுவரை தமிழகத்தில் 71,116 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பிய வர்களின் எண்ணிக்கை 4,545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. மேலும் மற்றொரு ஆறுதல் செய்தியாக நேற்று தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே இருந்தன. இதுவரை இல்லாத அளவுக்கு உச்சமாக நான்காயிரத்து தாண்டி பாதிப்புகள் தினசரி கண்டறியப்பட்டன குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் குறைய ஆரம்பித்தது தெரிய வந்தது. பாதிப்பு எண்ணிக்கை நான்காயிரத்து குறைவாக பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டன.

தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை விட, டிஸ்சார்ஜ் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

புதிய நோயாளிகளை விட அதிகமான டிஸ்சார்ஜ் எண்ணிக்கை கொரோனா பாதிப்பு குறைகிறது என்றால், இதை விடப் பெரிய விஷயம் என்னவாக இருக்க முடியும் நமக்கு.

இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் வருமாறு:

திருவொற்றியூர் – 1,214

மணலி – 531

மாதவரம் – 949

தண்டையார்பேட்டை – 2,275

ராயபுரம் – 2,426

திரு.வி.க நகர் – 1,858

அம்பத்தூர் – 1,360

அண்ணா நகர் – 2,349

தேனாம்பேட்டை – 2,317

கோடம்பாக்கம் – 2,837

வளசரவாக்கம் – 1,245

ஆலந்தூர் – 968

 அடையாறு – 1,913

பெருங்குடி – 919

சோழிங்கநல்லூர் – 621

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – 1,108

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *