செய்திகள்தமிழகம்

விலை உயர்ந்த மருந்துகளை வாங்க உத்தரவு

ஏழை எளிய மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோக்கில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் எவ்வித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகள் குறைவு நோய் தொற்று பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் ஆணைகள் வழங்கப்பட்டிருந்தது.

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மக்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிர்ணயித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைகள் வழங்கப்பட்டது.

நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு உயிர்காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகளை பயன்படுத்த மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

இதனை அடுத்து தமிழ் நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகம் மூலம் ஊசி மருந்துகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உயரிய உயிர்காக்கும் ஊசி மருந்துகள் மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது போன்ற உயர்தர உயரிய உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்து, அந்த மருந்துகளை மாவட்ட அளவில் இருப்பில் வைத்து பயன்படுத்துவதிலும், இந்திய அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தேவையின் அடிப்படையில் மருந்துகள் கூடுதலாக வழங்கப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி இது போன்ற மக்கள் நலன் காக்கும்.

நடவடிக்கைகள் விலை மதிப்பில்லாத மனித உயிர் இழப்புகளை தவிர்க்க உதவும். முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தலைமையில் குழு ஒன்று நோய்த் தொற்றை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், தீவிர முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.

1,769 மருத்துவர்கள் உட்பட 14 ,814 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தி உள்ளனர். விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்களை இவ்வாறு தெரிவித்தார்.

விலைமதிப்பு இல்லாத உயிர்களை காக்கும் பொருட்டு கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகளை கொள்முதல் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *