ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறைவாழ்வியல்

மகாபலியை வரவேற்கும் ஓணம் திருநாள் பண்டிகை நல்வாழ்த்துக்கள்

ஒருமுறை சிவாலயத்தில் எரிந்துகொண்டிருந்த விளக்கின் திரியை தூண்டி பிரகாசமாக எரிய உபகாரம் செய்தது எலி ஒன்று. அந்த எலிக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை வழங்கினார் சிவபெருமான். எலியானது மறுபிறப்பில் மகாபலி என்ற பெயருடன் மன்னனாக பிறந்து சக்கரவர்த்தியாக மூவுலகையும் சிறப்பாக ஆட்சி புரிந்தார்.

அசுர குலத்தின் அசுர வேக வளர்ச்சியை கண்ட தேவர்கள் மகாபலி மன்னன் போரிட்டார்கள். போரில் அசுர குலம் ஜெயிக்கவே தேவர்குலம் பயந்து திருமாலிடம் முறையிட்டார்கள். மகாபலி மன்னனின் ஆட்சியில் மக்கள் பயமுமின்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். அசுரனுக்கு பயந்து தேவர்கள் முறையிட்டனர். திருமாலை மகனாக அடைய வேண்டி காசிப முனிவரின் மனைவியான திதி என்பவள் வரம் கேட்க அதன்படியே அவர்களுடைய மகனாக வாமன அவதாரம் எடுத்தார் திருமால்.

அசுரனாக இருந்தாலும் தான தர்மங்களும் யாகங்கள் நடத்துவதிலும் மகாபலி மன்னன் சிறந்தவனாக விளங்கினான். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்த வாமனன். மகாபலியின் அரண்மனைக்குச் சென்று தான் தவம் செய்வதற்காக மூன்றடி மண் கேட்டார். வந்திருப்பது திருமால் என்பதை அறிந்த அசுரகுருவான சுக்கிராச்சாரியார் தானம் தர ஒப்புக் கொள்ள வேண்டாமென்று மகாபலியை தடுத்தார்.

இறைவனே தம்மிடம் கையேந்தி நிற்பதை அறிந்த மகாபலி மன்னன். குரு சொன்னதை கேட்காமல் மூன்றடி மண் தானம் தர ஒப்புக் கொண்டார். உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்த திருமால் ஓரடியால் பூலோகத்தையும், மற்றொரு அடியால் தேவலோகத்தையும், மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்றுக் கூற மகாபலி மன்னன் தன் சிரம்மேல் மூன்றாவது அடியை அழக்குமாறு கூறினார். இதன்படி சிரம் மீது கால் வைத்து அழுத்த அவன் பாதாள லோகத்திற்கு சென்றான்.

இந்த சமயத்தில் மகாபலி சக்கரவர்த்தி வாமனன் இடம்தான் ஆண்டுக்கு ஒருமுறை மக்களை வந்து பார்க்கவேண்டும் என்று அனுமதி கேட்டுக் கொண்டார். இதற்கு வாமனன் வரமளித்தார். இப்படி தன் மக்களை காண மகாபலி சக்கரவர்த்தி காண வரும் நாளே ஓணம் திருநாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. தங்களை காண வரும் மன்னனை வரவேற்கவும் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டுவதற்காக மலையாள மக்கள் வாசலில் பூக்களால் கோலமிட்டு அதில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், தோரன், காலன், ஓலன், இஞ்சி புளி, கிச்சடி, பச்சடி, கூட்டு கறி, எலிசேரி, மாங்காய் ஆகியவற்றை தலைவாழை இலை போட்டு பரிமாறுவார்கள். ஓண சத்ய எனப்படும் ஓண விருந்து பரிமாறப்படும்.

பலகார வகைகளை கேட்டாலே வயிறு நிறைந்து விடும். மேலும் பூவன் பழம், சர்க்கரை, உப்பேரி, காவற்றல், விளம்பி சாதத்தில் பருப்போடு நெய் சேர்த்து பப்படம் வைத்து சாம்பாருடன் பிரதமன் எனப்படும் பாயாசத்தை பிடித்து புளிசேரி கூட்டி இன்னொரு சுவை இறுதியாக மோர் கூட்டான் சேர்த்து உண்டு எழுந்தால் வயிறு நிறைந்து விடும்.

தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், அண்டை மாநிலங்களில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஓணம் அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுமண தம்பதிகளுக்கு தலை தீபாவளி போன்று தலை தலை ஓணம் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.

ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் இவ்விழா சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம் உத்திராடம், திருவோணம் என்று பத்து நட்சத்திர நாளிலும் விமர்சையாக கொண்டாடப்படும். கடைசி நாள் திருவோணத்தன்று மக்களை தேடி வரும் மகாபலி மன்னனை வரவேற்க கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலம் போட்டு, புத்தாடை அணிந்து, தீபாவளி போன்று பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *