டிஎன்பிஎஸ்சி

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுக்கான மக்கள் தொகை குறிப்புகள்!

மக்கள் தொகையைத் தீர்மானிக்கும் அடிப்படைக் காரணிகள்:

  • பிறப்புவீதம் என்பது ஓர் ஆண்டில் 1000 பேருக்கு புதிதாக  பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.
  • இறப்புவீதம் என்பது ஓர் ஆண்டில் 1000 பேருக்கு எத்தனை பேர் இறக்கிறார்கள் என்ற எண்ணிக்கையைக் குறிக்கும்.
  • வெளிநாட்டில் குடியேறுதல், உள் நாட்டில் குடிப் பெயர்ச்சி என இடப்பெயர்வுகள் இருவகையாகப் பிரிக்கலாம்.
  • நம் நாட்டு மக்கள் வெளிநாட்டில்  குடியேறும் சென்று குடியேறும் பொழுது நம்நாட்டு மக்கள் தொகையின் அளவு குறைகிறது.
  • பிற நாட்டும் மக்கள் நம் நாட்டில் குடியேறுவது  உள்நாட்டுக் குடிப்பெயர்ச்சி எனப்படும். இதனால் நம் நாட்டு மக்கள் தொகையின் அளவு அதிகரிக்கிறது. 

மக்கள் தொகை வெடிப்பிற்கான காரணிகளை : 

  • கல்வியறிவின்மையுடன் அதிக பிறப்பு வீதத்திற்கான காரணங்களுக்கான ஒன்றாகும். 
  • இந்திய பெண்களின் திருமண வயது குறைவு  மக்கள் தொகை வெடிப்பிற்கான காரணங்கள் ஆகும்
  • ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என எண்ணம்  பிறப்பு எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது. 
  • கட்டாயத் திருமணம் மற்றும் சமுதாயக் சமயக் காரணங்களாலும் மக்கள் தொகை அதிகரிக்கிறது. 

ராபர்ட் மால்ஸ்: 

  • தாஸ் ராபர்ட் மால்தஸ் உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் ஆவார். 
  • மக்கள்  தொகை வளர்ச்சியால்  எழும் சிக்கல்களை பற்றி முதன் முதலில் மக்கள் தொகை கோட்பாடுகள் என்ற தலைப்பில் நூலினை வெளியிட்டார். 
  • மக்கள் தொகை கோட்பாடு குறித்து 1798இல் வெளியிட்டார். 
  • பல குறைபாடுகள் கொண்டதாகவே அக்கோட்பாடுகள் அமைந்திருந்தன. 
  • உணவு உற்பத்தி மக்கள் தொகை பெருக்கல் வீதத்திலும் உணவு உற்பத்தி கூட்டல் வீதத்திலும்  அதிகரிக்கிறது என்ற மால்தஸின் கோட்பாடு தெரிவிக்கின்றது .

மால்தஸின் மக்கள் தொகை கோட்பாட்டின் குறைபாடுகள் :  

  • தரிசான நிலங்களை புதிய முறையில் பயன்படுத்துவதன் மூலம் உணவு உற்பத்தியை பெருக்கலாம் என்பதை கணக்கிடவில்லை. 
  • ஒரு நாடு தன்னுடைய அளவுக் அதிகமான உற்பத்தி செய்த பொருளை பிற நாடுகளுடன்  பரிமாறிக் கொள்கிறது. தற்காலத்தில் போக்குவரத்து, பன்னாட்டு வியாபார சக்திகள் அனைத்து நாட்டுகளையும் எளிதில் இணைக்கின்றது. 
  • மால்தஸின்  கூற்றுப்படி உணவு உற்பத்தி கூட்டல் வீதத்தில் உயருகின்றது என்ற கூற்றும் மறுக்கப்பட வேண்டியதே ஆகும்.

உத்தம் அளவு கோட்பாடு :

  • ஒரு நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்திற்க்கும் மொத்த செல்வத்திற்க்கும் இடையேயுள்ள தொடர்பு தான் மக்கள் தொகை பற்றிய உண்மையான கோட்பாடு ஆகும் என கூறுவது உத்தம அளவு மக்கள் தொகை கோட்பாடு ஆகும். 
  • 1924-இல் எட்வின்  கேனன் என்பவரால் உத்தம் அளவு மக்கள் தொகை கோட்பாடு வெளியிடப்பட்டது. எட்வின் செல்வம் என்னும் நூலின் மூலம் அவர் உத்தம் அளவு கோட்பாடை வெளியிட்டார். 
  • மக்கள் தொகை அளவிற்கும், செல்வ உற்பத்தியின் அளவிற்கும் உள்ள தொடர்பை இந்தூல் விளக்குகின்றது. 
  • எட்வின் கேனனின் உத்தம மக்கள் தொகை  கோட்பாடு மால்தஸின் மக்கள் தொகை கோட்பாட்டை விட மிகுந்த செயல் திறனுடையது.

 இந்திய தேசிய மக்கள் தொகை கொள்கையின் நோக்கம்: 

  • தேவையான கருத்தடை சாதனங்கள் வழங்கியும், சுகாதார கட்டமைப்பு வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பணிகள் மூலம் மக்கள் தொகையை ஒரு நிலைப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதே தேசிய மக்கள் தொகை கொள்கையின் நோக்கமாகும். 

தேசிய மக்கள் தொகையின் குழுவானது  பிரதம மந்தரி, மாநில முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களால் தலைமை தாங்கி  நோக்கங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

போட்டி தேர்வில் கேட்க வாய்ப்பு இருக்க கூடிய கேள்வி பதில்கள்: 

  1. இந்திய தேசிய மக்கள் தொகை கொள்கையின் நோக்கம் யாது?
  2. மால்தஸ் மக்கள் தொகை  கோட்பாட்டின் குறைகள் யாவை?
  3. எட்வின் கேனனின் கோட்பாட்டின் பெயர் என்ன?
  4. உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர் யார்?
  5. பெண்ணின்  திருமண வயது குறைவு எதன் காரணமாக அமைக்கின்றது?
  6.  செல்வத்தை மக்கள் தொகையோடு கணக்கிடும் கோட்பாட்டின் பெயர் என்ன?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *