செய்திகள்தமிழகம்

மிரட்டல் அல்ல…நம்பிக்கையை காப்பற்ற வேண்டும்:- ஸ்டாலின்..

தூத்துக்குடி கலைஞர் அரங்கம் முன்பாக வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

பின்னர் பேசிய அவர், “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இதுவரை கழகம் காணாத மிகப்பெரிய வெற்றியை நீங்கள் தந்திருக்கிறீர்கள் அனைவருக்கும் எனது நன்றி” தெரிவித்தார்.

மேலும், “உள்ளாட்சி தேர்தலில் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள், பெற்ற பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும், என்றும், இல்லையேல் நடவடிக்கை உறுதி, மிரட்டல் அல்ல, மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் “தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நம்மை வெற்றி பெற செய்திருக்கிறார்கள்” “எங்கு சிறு தவறு நடந்தாலும், அதைக் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *