சினிமாதமிழகம்

நயன்தாராவின் O2 பட கதை இதுதானா…

நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் தான் O2 . பொதுவாகவே நம்ம நயன்தாரா அவர்கள் நடிக்கும் படங்கள் அவரை மையப்படுத்தியே அதிகமாக கதைக்களம் அமையும். அதிலும் இப்படத்தில் ஆபத்தில் இருக்கும் தன் மகனை காப்பாற்ற போராடும் அன்னையின் உருவமாய் இப்படத்தில் அவர் உள்ளார்.

திரைப்படத்தின் பாதி கதை ஒரு பஸ்ஸிலேயே அமைகிறது இருந்தாலும் அதில் ஜாதிக்காக காதலை மறுத்து தன் மகளை அழைத்து செல்லும் அப்பா மகள், அதே பஸ்ஸில் வரும் காதலன், போலீஸ் ,அரசியல்வாதி அவரது தொண்டன் இவ்வாறு மாறுபட்ட மனநிலைகளில் பயணிக்கும் மனிதர்களுடன் நுரையீரல் பாதிப்பால் ஆக்சிஜன் இல்லாமல் வாழ முடியாத தன் மகனின் ஆபரேஷனுக்காக நயன்தாராவும் தன் மகனை அழைத்துக்கொண்டு அந்த பஸ்ஸில் செல்கிறார்.

மேலும் படிக்க : டான் படம் பாடல் ஜாலியா நீ வாடி..

இனி சூழ்நிலையில் அந்த பேருந்து ஒரு பள்ளத்தில் மாட்டிக்கொள்கிறது அப்போது அவர்களை மீட்க வரும் வரை அங்குள்ளவர்களை ஆக்சிஜன் தேவைப்படுகிறது இதனால் அனைவரின் பார்வையும் நயன்தாராவின் மகனான ரித்விக் மீது திரும்புகிறது.

உயிர் போகும் நிலையில் அனைவரின் மனநிலையும் எவ்வாறு இருக்கும் என்பதை இப்படம் தெளிவாக காட்டுகிறது. இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையில் தன் மகனை அவர்களிடமிருந்து நயன்தாரா காப்பாற்றுவாரா, என்பதுதான் இப்படத்தின் மையக் கருத்தாக உள்ளது.

மரணத்தின் தருவாயில் உள்ள போதும் தன் மகனின் உயிரைக் காப்பாற்ற போராடும் ஒரு உன்னதத் தாயின் கதையாக இப்படம் உள்ளது.

மேலும் படிக்க : விஜய் சேதுபதியோட அண்ணாத்த செய்தி என்னவாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *