ஆன்மிகம்ஆலோசனை

நவராத்திரி : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம்

நவராத்திரி தினங்களில் ஒன்பது நாளும் விரதமிருந்து வழிபடுவது விசேஷம். இன்றைய தினங்களில் இரவு ஒரு வேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். இந்த நாட்களில் சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களை அம்பிகையாக பாவித்து மஞ்சள் குங்குமம் தாம்பூலம் வழங்கி வணங்கிட வேண்டும்.

புரட்டாசியில் வரும் மகாளயபட்ச அமாவாசைக்கு அடுத்த நாளாகிய பிரதமை திதியிலிருந்து துவங்கி நவமி வரையாகிய ஒன்பது நாட்களும் பல்வேறு ரூபங்களில் அம்பிகை நமக்கு அருள்பாலிக்கிறாள். நவராத்திரி தினத்தன்று அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம் எடுக்கிறார்.

  • முதல் மூன்று நாட்கள் துர்க்கையாகவும், நம்மை காத்து ரட்சிக்கிறாள் தேவி.
  • அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமியாகவும், நம்மை காத்து ரட்சிக்கிறாள் தேவி.
  • இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் நம்மை காத்து ரட்சிக்கிறாள் தேவி.

அவரவர் வீட்டின் இட வசதி, பொருளாதார நிலையை பொறுத்து படிகளை 3, 5, 7, 9 என ஒற்றை படையில் அமைத்துக் கொள்ளலாம்.

நவராத்திரி முழுமையும் கொண்டாட இயலாதவர்கள், கடைசி மூன்று நாட்களாகிய சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் மட்டுமாவது வழிபட்டால் ஒன்பது நாட்களும் அன்னையை வணங்கிய பலன்கள் கிட்டும். இதுவும் முடியாதவர்கள், எட்டாவது தினமாகிய அஷ்டமி திதியிலேனும் பூஜை செய்வது அம்பிகையின் கடைக்கண் பார்வையை நம்மீது விழ வைக்கும் என்பது நிதர்சனம்.

மேலும் படிக்க : சிவனின் அருளைப் பெற்றுத்தரும் 108 நந்தீஸ்வரர் போற்றி

நம்மை பெற்றவளை நாம் அம்மா என அழைக்கிறோம். அப்பாவின் பார்வையில் அம்மாவானவள் மனைவி. தாத்தா பாட்டிக்கு அவளே மகள். சித்தி மாமாவிற்கு சகோதரி. இன்னும் மருமகளாக, அண்ணியாக எத்தனையோ உறவுகளின் பெயரால் அம்மா அழைக்கப்படுகிறாள். உறவுமுறை வெவ்வேறாக இருந்தாலும் நபர் ஒன்றுதான்.

கடவுள்கள் விஷயத்திலும் இந்த ஃபார்முலாவே பயன்படுத்தப் படுகிறது. தீமையை அழித்து நன்மையை கொடுக்கும் வகையில் சக்தி பல்வேறு ரூபங்களை எடுக்கிறாள்.

மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை ஆதார சக்தி ஒன்றே.

மேலும் படிக்க : பிரதோஷ காலத்தில் உச்சரிக்க வேண்டிய சிவன் 108 போற்றி

இந்த தெய்வங்கள் அனைத்தையும் நம் வீட்டிற்கே வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி. ‘சரத் காலத்தில் செய்யும் பெறும் வழிபாடான நவராத்திரியில் என்னை துதித்து, என் மகாத்மியத்தை கேட்போரும் படிப்போரும் துன்பங்களிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் பெறுவார்கள்’ என தேவி மஹாத்மியத்தில் நவராத்திரியின் சிறப்பு பற்றி அம்பிகையே கூறியிருக்கிறாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *